Aug 14, 2009

வாழ்த்துக்களும் வேண்டுகோளும்....

62வது சுதந்திரதினத்தைக் கொண்டாடும் இந்திய மக்கள் அனைவருக்கும் எனது அன்பான சுதந்திர தின வாழ்த்துக்கள்!


இந்த இனிய நாளிலே உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள்... உங்களுக்குத் தெரியும் அடிமைத்தனத்திலிருந்தான விடுதலை என்பது எவ்வளவு முக்கியமானதென்று.... ஆங்கிலேய அடிமைத்தனத்திலிருந்து உடைத்துக்கொண்டு வெளிவர உங்கள் முன்னோர் பட்ட பாடுகளும் சிந்திய இரத்தமும் நீங்கள் அறியாததா? அஹிம்சைத் தீவிரவாதத்தால் காந்தியும், போராட்டத் தீவிரவாதத்தால் சுபாஷ் சந்திரபோசும் போராடிய போராட்டத்தின் வலி நீங்கள் உணராததா? அத்தகைய மகத்தான விடுதலைப்போராட்டத்தின் வெற்றிதான் நீங்கள் இன்று அனுபவித்துக் கொண்டாடும் சுதந்திரதினம்.... விடுதலைப் போராட்டத்தின் மகத்துவத்தை, அதன் தேவையை மேற்கத்தேய நாட்டில் பிறந்த சிலர் உணராது இருக்கலாம்... ஆனால் தயவு செய்து விடுதலையின் தேவையை அதன் மகத்துவம் தெரிந்த நீங்கள் மறந்து விடாதீர்கள்.... இதுவே எனது அன்பான கோரிக்கை.