Aug 13, 2009

இளைஞர்களை கட்டிவைக்காதீர்கள்....


இன்றைய இளைஞர்கள் எல்லாவற்றிலும் கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள். உலகைப் பரந்த நோக்கில் பார்க்கிறார்கள், வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்த முயற்சிக்கின்றார்கள் ஆனால் சமூகம் தொடர்பான அவர்களது சிந்தனை இலங்கை இளைஞர்களிடையே வெகுவாகக் குறைந்து வருவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. ஒவ்வொருவரும் தாம், தமது வாழ்க்கை என ஒரே நேர்கோட்டில் சிந்திக்கின்றார்கள். சமூகத்தைப் பற்றியோ அதன் தேவைகள், மாற்றங்கள் பற்றியோ சிந்திக்கும் நிலையில் அவர்கள் இல்லை என்பது கவலைக்குரியது.

சில தினம் முன்பு எனது நெருங்கிய நண்பன் ஒருவனிடம் ஒரு சமூக ஆர்வத்தொண்டு பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன் அவனும் கேட்டுக்கொண்டி
ருந்தான், உதவிக்கு ஆட்கள் தேடித்தருவதாக வாக்களித்தான் ஆனால் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள விருப்பமில்லை அவனுக்கு, கேட்டேன் “இல்லடா.... வேலை நிறைய இருக்கு... படிக்கவும் வேண்டும்” எனச் சமாளித்துவிட்டான் ஆனால் எனக்குத்தான் தெரியுமே உண்மையான காரணம்... அவன் இப்படி சமூக அக்கறை இல்லாமல் இருந்தவன் இல்லை ஆனால் அவனது சமூக ஆர்வத்தால் வீட்டில் பிரச்சினை, ஒவ்வொருநாளும் வீட்டில் திட்டு வாங்கினான் “படிச்சு வேலைவட்டியைப் பாக்கிறத விட்டுட்டு உது என்னத்துக்கு வேண்டாத வேலை” எனத் திட்டித்திட்டி அவனட மனதில் அது ஆறாத வடுவாகி இன்று சமூகப் பொறுப்பையே அவன் மறந்துவிடும் அளவுக்கு கொண்டுவந்துவிட்டார்கள். இதில் அவன் மேல் பிழையில்லை அவன் பெற்றோர் மீதும் பெரிதும் பழி சுமத்த வழியில்லை ஏனென்றால் சமூகப் பொறுப்பை மறந்து வாழ்க்கையை நடத்த நாம் கற்றுக்கொண்டுவிட்டோம் - உண்மையில் நாம் வாழ்கிறோமா இல்லைத் தப்பிப் பிழைக்கிறோமா என எனக்
கு ஐயம் எழுவது கூட உண்டு.

இன்றைய இளைஞர்கள் சமூக சேவையென்றாலே வரத் தயங்குகிறார்கள் - இதற்கு ஆர்வமின்மை காரணமல்ல, அவர்களுக்கு மிகுந்த ஈடுபாடும் விருப்பமும் உண்டு ஆனால் உற்றோரும் சுற்றோரும் இது ஏன் வீண்வேலை என அவர்களுக்குத் தடைபோடுவதால் அதனை இடித்தெறியும் வன்மை இலாது அவர்கள் காட்டும் நேர்கோட்டிலேயே பயணிக்கின்றார்கள். சமூகப் பொறுப்புணர்வின் நிலைமையே இப்படியென்றால் அரசியல் பக்கம் இளைஞர்கள் வருகிறார்களா எனப் பார்த்தால், அரசியல் வாரிசுகளும் மற்றும் மிகச் சொற்ப இளைஞர்களும் போக மீதம் பேர் அரசியல் என்றாலே விலகித்தான் நிற்கின்றார்கள். அதுவும் கல்தோன்றி, மண்தோன்றாக் காலத்து முன்தோன்றிய மூத்ததமிழ் பேசும் எம்மவர் அரசியலைச் சாக்கடை சாக்கடை என்று கூறியே இளைஞர் மனதிலிருந்து அதனை விலக்கி வைத்துவிட்டார்கள். விளைவு இன்று இன்னும் அந்தச் சாக்கடை சாக்கடையாகவே இருக்கிறது. அரசியலைச் சாக்கடை சாக்கடை என்று சொல்பவர்களை ஒன்று கேட்கின்றேன் உங்கள் வீட்டில் குப்பையிருந்தால் அதை நீங்களோ, உங்கள் பிள்ளையைக்கொண்டோ அப்புறப்படுத்துவீர்களா இல்லை குப்பை குப்பை எனச் சொல்
லிக்கொண்டு அந்தப் பக்கம் போகாமலே குப்பபையைப் பெருகவிட்டு வீட்டை நாறவிடுவீர்களா? நாறவிடுவோம் எனச்சொலபவர் பற்றி எனக்குக் கவலையில்லை அவர்கள் பற்றிக் கவலைப்படவேண்டியது மனநல மருத்துவர்தான் ஆனால் இல்லை எனச் சொல்பவர்கள் வீடு அழுக்கானால் சுத்தம் செய்கிறீர்களே ஆனால் நாடு அமுக்கானால் மட்டும் ஏன் பார்க்காமல் கண்ணை மூடிக்கொள்கிறீர்கள்??? க்ணணை மூடிக்கொண்டு எவ்வளவு காலம் வாழ்ந்துவிட முடியும்??? யோசியுங்கள் தப்பிப்பிழைப்பது வாழ்க்கையல்ல - அப்படியிருப்பதிலும் செத்துமடிவது மேல்.

அரசியல் என்பதே இன்று தலைகீழ் ஆகிவட்டது. அது ஒரு கலை என்பதிலிருந்து இறங்கி வியாபாரம் ஆனதன் விளைவே இன்று நீங்கள் அதனைச் சாக்கடை சாக்கடை என வையும் அளவுக்குக் கொண்டு வந்து விட்டிருக்கிறது. இந்தச் சாக்கடையினுள் ஊறியவர்களுக்கு அதனைச் சுத்தம் செய்ய வேண்டிய தேவை இருக்காது ஆக அவர்கள் சாக்கடையைச் சாக்கடையாகவே இருக்கவிட்டுவிடுவார்களேயன்றி அதனைச் சுத்தம் செய்து மாற்
றம் கொண்டுவர எத்தனிக்கமாட்டார்கள். ஏனென்றால் சாக்கடையில் வாழும் தன்மை அவனுக்கேயுண்டு வேற்றோர் அதனுள் வாழமுடியாது அதனால் தனியுடைமையாக அதனைப் பரம்பரை பரம்பரையாக அனுபவிக்கின்றான். நீங்களும் அப்படியே விட்டுவிட்டீர்கள் - ஆனால் இது உங்கள் கழிவுகள் போகும் சாக்கடையல்ல உங்களுக்கு குடிக்க நீர் தரும் சாக்கடை உங்களை ஆளும் சாக்கடை அது எப்படியோ அப்படியே உங்கள் வாழ்கையும் அமையும். ஆனால் நீங்கள் பாராட்டப்படவேண்டியவர்கள் எத்தனை துன்பத்தை இந்த அரசியல்வாதிகள் தந்தாலும் தாங்கிக்கொண்டு மாற்றம் எதனையும் வேண்டாது அவர்களுக்கே மீண்டும் மீண்டும் வாக்களிக்கிறீர்களே - சாதனைதான்.

சிந்தியுங்கள்.... இளைஞர்களால் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்தமுடியும்...
ஏனென்றால் எதற்கும் வளைந்துகொடுக்காத மனோதைரியம் இளைஞர்களுக்குத் தான் உண்டு. எத்தனை காலம் தான் இந்தத் தப்பியொட்டி வாழும் வாழ்ககை... ஆர்வத்துடன் இருக்கும் இளைஞர்களை தடுக்காதீர்கள் அவனது உறுதியான மனதிலே அடித்து அடித்து அதை வளைத்துவிடாதீர்கள்.... நீங்கள் அறிந்த பெரியோரெல்லாம் வியந்து பாராட்டியது இளைஞனைத்தான். பாரதி தேச விடுதலைக்காக துணைக்கழைத்தது இளைஞர்களைத்தான்.... விவேகானந்தர் நாடடைக் கட்டியெழுப்பக் கேட்டது 100 இளைஞர்களைத்தான்... சேகு
வேரா தூயமையான விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்டதும் இந்த இளைஞர்களோடுதான்... அவர்கள் ஏற்படுத்திய மாற்றம் அளப்பரியது. அவர்களை அவர்களாகக் கனவு காணவிடுங்கள் - அவர்களது கனவினைக்கூட நீங்களே தீர்மானிக்க எத்தனிக்காதீர்கள். மீண்டும் சொல்கிறேன் அரசியல் உங்கள் பார்வையில் சாக்கடையாகவே இருக்கட்டும், அதை சுத்தம் செய்யும் பலமோ திறனோ உங்களுக்கில்லை ஆனால் இன்றைய இளைஞர்கள் எங்களுக்கு அந்தப பலமும் திறமும் உண்டு - அதனைச் செய்யவிடாது தடுக்காதீர்கள்.

நான் இதை உங்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்ளும் இந்த தினம் உலகின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு சாதனை இளைஞனாக இருந்து கொடுமைகள் நிறைந்த தனது தேசத்திற்கு விடுதலை ஒளியுட்டிய இளைஞன் ஃபிடல் கஸ்ட்ரோ பிறந்த தினம்.... அந்த இளைஞன் அன்று ஏற்படுத்திய அந்த மாற்றம் தான் அத்தனை இலட்சம் மக்களின் வாழ்க்கைக்கு ஒளிகொடுத்தது... இப்படி எங்களுக்குள் ஒளிந்திருக்கும் கோடிக்கணக்கான கஸ்ட்ரோக்களை வேரோடு அறுத்துவிடாதீர்கள்.....