Jul 31, 2009

R.I.P - Sir Bobby Robson

A great football legend is no more with us...

Sir Bobby Robson was a great football player and later a wonderful manager. The whole football world is in tears after his demise. He will remain in the hearts of the fans and will be over a silver line in the history books.


May you Rest in Peace - Sir Bobby Robson.

ஒரு மாணவி தற்கொலை - விழித்தது இலங்கை அரசாங்கம்


யுத்தம் ஓய்ந்த நிலையில் இலங்கையில் சூடான செய்திகள் பெரிதாக இக்காலகட்டத்தில் வருவதில்லை - புளித்துப் போன ஒரே முகங்களைப் பத்திரிகையிலும் ஏனைய ஊடகங்களிலும் மட்டுமல்ல பாதையோரமெல்லாம் கண்டு கண்டு எரிச்சல்தான் அதிகரிக்கிறது. இது இவ்வாறு இருக்க இலங்கையை ஒரு ஆட்டு ஆட்டி இருக்கிறது இந்தப்பா
டசாலை மாணவியின் தற்கொலை முயற்சி.

இலங்கையின் பிரபல பெண்கள் பாடசாலையொன்றில் ஒன்பதாம் தரத்தில் கல்வி கற்கும் 14 வயதேயான மாணவி ஜீலை மாதம் 22ம் திகதி
பாடசாலைக்கு கைத்தொலைபேசி கொண்டுவந்ததற்காக பாடசாலை மாணவ தலைவிகளால் கண்டிக்கப்பட்டு அதிபர் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இவ்வேளை அம் மாணவி மலசலகூடத்திறகுச் சென்றுவருவதாகக் கூறிச் சென்றிருக்கிறார். 15-20 நிமிடமாகியும் அவர் திரும்பாதது கண்டு மாணவதலைவிகளும் ஆசிரியர்களும் மலசலகூட்த்திற்குச் சென்று
பார்த்தபோது அங்கு அம்மாணவி தனது கழுத்துப்பட்டியைப் பயன்படுத்தித் தூக்கிட்டுத் தொங்கியபடி காணப்பட்டார். உடனே அம்மாணவி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டி போதும் உடற்பாகங்கள் செயலிழந்ததன் காரணமாக உயிரிழந்தார். இநதத் துயர சம்பவம் இலங்கை மாணவர்களை மட்டுமல்ல அரசாங்கத்தையும் கொஞ்சம் தடுமாறச் செய்திருக்கிறது.

மேலே நான் தந்தது பத்திரிகையிலும் வேறு ஊடகங்களிலும் வந்த செய்தியின் தொகுப்பு. இது தொடர்பிலான இன்னும் சில பல விஷயங்களை பாடசாலை மட்டத்தில் இருப்பதால் வதந்திகளாகவும், கதைகளாகவும் நாம் அறிந்து கொண்டோம் - ஆனால் அவையெல்லாம் இங்கு பகிர்வது நியாமல்ல முறையுமல்ல - ஆயினும் இது நடந்த பின்பு இலங்கை அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் தனியார் பாடசாலைகளில் மாணவர்கள் கைத்தொலைபேசி பயன்படுத்துவதையும் கொண்டுவருவதையும் தடை செய்தது (அரசாங்க பாடசாலைகளில் முன்னமிருந்தே இவ்விதியுண்டு). அதோடு மட்டும் நின்று விடாமல் இலங்கை தொலைத்தொடர்பாடல் ஒழுங்கமைப்பு ஆணைக்குழு இலங்கையிலிருந்து இயங்கும் “வயது வந்தோருக்கான” தளங்களைத் தடைசெய்ய உத்தரவிட்டுள்ளது. இந்த
இரண்டு நடவடிக்கைகளையும் ஒப்பிட்டு ஒருங்கிணைத்துப் பார்க்கையிலே அச்சம்பவத்தை உங்களால் முழுமையாக ஊகிக்க முடியும் எனக் கருதுகிறேன்.

இலங்கை அரசாங்கம் எடுத்த உருப்படியான முடிவுகளில் ஒன்று இலங்கையிலிருந்தான “நீலத் தளங்களை” தடைசெய்தது. இதற்குப் பிரதான காரணம் வெளிநாட்டுத் தளங்களைப் போல இத்தளங்களில் “தொழில் ரீதியாக” நடிக்கப்பட்டு வெளியடப்படும் படங்கள் இருப்பதில்
லை மாறாக திருட்டுத்தனமாகவும், முறைகேடாகவும் எடுக்கப்படும் பட்ங்களும் வீடியோக்களுமே அதிகமுண்டு - இதனால் பாதிக்கப்பட்ட இலங்கையின் பெண்களும், சிறுவர்களும் எக்கச்சக்கம். அத்தகைய ஈனத்தனமான தளங்களைத் தடைசெய்தது மிகச் சிறந்த முடிவு.

ஆனால் கைத்தொலைபேசிப் பாவனையைத் தடைசெய்தது சளிப்பிடித்ததற்கு மூக்கை வெட்டிய கதைதான். கைத்தொலைபேசி தடைக்கு மூல காரணமே அதன் மூலம் அநாவசிய விடயங்கள் பரப்பப்படுவதும், தேவையில்லாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதுமாகும் இதற்காக பல வகைகளில் பயனுள்ள அந்தச் சாதனத்தைத் தடை செய்வதில் அர்த்தமில்லை மாறாக அநாவசிய விடங்களுக்கு அது பயன்படுத்தப்படாமிலிருக்கும் படி சட்ட ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் சில பலமான நடவடிக்கைகளை எடுக்கலாம். உதாரணமாக இலங்கையிலிருந்து மட்டும் இயங்கும் “நீலத் தளங்களைத்” தடைசெய்தது போல (அல்லது வெளிறாட்டிலிருந்து இயங்கும் “தமிழ் நெட்டைத்” தடைசெய்தது போல) சகல “நீலத்தளங்களையும்” தடைசெய்யலாம். மேலும் உள்நாட்டில் அநாவசியச் செயல்களிலும் முறைகேடுகளிலும் ஈடுபடுபவர்கள் மீது மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கலாம் இவற்றின் மூலம் இதைத் தடுப்பதை விட்டு விட்டு கைத்தொலைபேசிப் பாவனையைத் தடுப்பதில் பயனில்லை.

இன்னும் ஒரு விடயத்தை இந்தச் சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். இத்தகைய பாலியல் ரீதியான முறைகேடுகளுக்குக் காரணம் பாலியல் தொடர்பான முறையான புரிந்துணர்வின்மையே, ஆகவே அரசாங்கம் பாலியல் கல்வி தொடர்பான அறிவை மாணவர்களுக்கு வழங்குவதன் மூலம் அவர்களை விழிப்படையச் செய்து இத்தகைய முறைகேடுகளிலிருந்து பெருமளவுக்கு நாளைய சமுதாயத்தைப் பாதுகாக்கலாம். மாறாக இன்னும் ஜே.வி.பி (ஜனதா விமுக்தி பெரமுண) அல்லது ஹெல உறுமய போல பிற்போக்கு வாதம் பேசிக் கொண்டிருந்தால் இது போன்ற சம்பவங்களை இன்னும் இடம் பெற்றுக் கொண்டுதான் இருக்கும்.

மாணவர்களுக்கு ஒரு கருத்து - தவறு என்பது தவறிச் செய்வது, அல்லது அறியாமையினால் விளைவது. ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒன்றைக் கற்றுக்கொண்டுதான் இருக்கிறான், அந்தக்கற்றல் அதிகமாக தவறுவிடுவதன் மூலமே கிடைக்கிறது. ஆக உங்கள் அறியாமையால் செய்யும் தவறுக்காக வருந்துங்கள் அதோடு திருந்துங்கள் - தயவு செய்து தண்டனையை நீங்களே உங்களுக்குக் கொடுத்துக் கொள்ளாதீர்கள், ஏனெனில் நீங்கள் தண்டிக்கப்பட வேண்டியவரே அல்ல. தப்பு என்பது தான் தெரிந்தே செய்வது - ஆனால் எனக்குத் தெரியும் மாணவர்கள் (நாங்கள்) எதையுமு் அதிகம் தெரிந்து செய்வதில்லை - அடிப்படையில் அதற்கான பக்குவம் எமக்கில்லை ஆக நாம் விடுகிற சின்னச் சின்னத் தவறுக்ளுக்காக எம்மை மாய்த்துக்கொள்ளக் கூடாது. மாணவப் பருவம் என்பது எல்லாவிதமான அனுபவங்களையும் உங்களுக்குத் தரக்கூடியது. இனிப்பானவற்றைச் சுவையுங்கள் கசப்பானவற்றை வாயில் போட்டுக்கொண்டுவிட்டால் கூடப் பயப்படாமல் துப்பிவிடுங்கள் - இதற்காக எல்லாம் வருத்தப்படத்தேவையில்லை. மனித வாழ்வின் சுவைகளை உணரும் பருவம் இது - சுவைத்துப்பாருங்கள்...

இறுதியாக இந்த அருமையான வரிகள் உங்களுக்காக -
“தவறு செய்தவன் திருந்தப் பார்க்கணும் -
தப்பு செய்தவன் வருந்தியாகணும்”

மேலேயுள்ள வண்ணந்தீட்டப்பட்ட பெண் மாணவியின் படத்திற்கும் செய்தியில் குறிப்பிட்ட எந்நபருக்கும் சம்பந்தமேதும் இல்லை. அது இணையித்திலிருற்து பெறுப்பட்டவெறும் வண்ணப் படம் மட்டுந்தான்.

Jul 26, 2009

கேவலமாகிக்கொண்டிருக்கும் டாக்டர் பட்டம்.


டாக்டர்.அவர் - டாக்டர் இவர் என கண்டவன் போனவனெல்லாம் இப்போது பெயருக்கு முன்னால் டாக்டர் பட்டம் போட்டுக்கொண்டு அலைகிறார்கள். அப்பிடியென்றால் டாக்டர் பட்டம் பெறுவது அவ்வளவு இலகுவானதா என்று நாம் நினைக்கலாம் - உண்மையான கலாநிதிப்பட்டம் பெறுவது மெத்தக் கடினம் ஆனால் கௌரவ டாக்டர் பட்டம் பெறுவது தள்ளுவண்டிக்கடையில் கச்சான் வாங்கிச் சாப்பிடுவது போல மிக இலகுவானது.

உலகத்திலேயே டாக்டர் பட்டம் போட்டுக்கொள்பவர்கள் ஒன்றில் வைத்தியர்களாக இருத்தல் வேண்டும் அல்லது தத்தம் துறையில் படித்து ஆராய்ச்சி செய்து கலாநிதிப்பட்டம் (PhD) பெற்றவர்களாக இருக்க வேண்டும் - இது தான் நியதி ஆனால் சில “படிக்காத மேதைகளை” கெளரவிக்க அவ்வப்போது பல்கலைக்கழகங்கள் கௌரவ டாக்டர் பட்டங்களை வழங்கி வந்தன - வருகின்றன ஆனால் இன்றைய கேவலமான நிலை என்ன தெரியுமா கண்டவன் போனவனெல்லாம் இப்படி கௌரவ டாக்டர் பட்டங்களைப் போட்டுக்கொண்டு அந்தப் பட்டத்தின் மதிப்பையே கெடுத்துவிட்டார்கள்.

இந்தியாவின் நிலை வேறு - அங்கே நடிகர்களும் அரசியல்வாதிகளும் பல்கலைக்கழங்களுடாக கௌரவ டாக்டர்கள் ஆகின்றனர். எமது இலங்கையின் நிலையைப் பார்ப்போம். இலங்கையில் பல்கலைக்கழகங்கள் கௌரவ டாக்டர் பட்டங்கள் வழங்குவது மிக அரிது (அண்மையில் ஜனாதிபதிக்கும், பாதுகாப்புச் செயலாளருக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது). அப்படியானால் இலங்கையில் இத்தனை தொகைப்பேர் டாக்டர் பட்டம் பெறுவது எப்படி? - கொஞ்சம் ஆழமாய் அலசிப் பார்த்தேன் இலங்கையில் கௌரவ டாக்டர் பட்டங்களை வழங்குவதில் முன்னணியில் நிற்பது ஒரு கராத்தேச் சங்கம். சர்வதேச போர்க்லைப் பல்லைக்கழகம் என ஜப்பானில் பதிவு செய்யப்பட்டிருக்கும் ஒரு அமைப்பின் மூலம் இலங்கையில் கௌரவ டாக்டர் பட்டங்களை வழங்குகிறர்கள். இதனால் இவர்கள் கராத்தே துறையில் சிறந்தவர்களுக்குத்தான் வழங்குகிறார்கள் என நீங்கள் எண்ணிவிட வேண்டாம், இதன் மூலம் டாக்டர் பட்டம் பெற்றவர்களுக்கும் கராத்தேக் கலைக்கும் அல்லது எந்தவொரு போர்க்கலைக்கும் எது வித சம்பந்தமுமில்லை. இன்னும் கொஞ்சம் ஆழமாக தேடிப்பார்த்ததில் ஒரு டாக்டர் பட்டத்திற்கு ரூபாய்.20000 முதல் அவரவர் தகுதிக்கேற்ப வசூலிக்கிறார்கள். காசு கொடுத்தால் டாக்டர் பட்டம் தயார் - வருடத்திற்கொருமுறை ஜப்பானிலிருந்தொருவரை அழைத்து இங்கே பட்டமளிப்பு விழா வேறு நடாத்துகிறார்கள், அதைப் பத்திரிகைகளில் வேறு வெளியிடுகிறார்கள். சரி இதெல்லாம் உண்மையில் படித்தவர்களுக்குத் தெரியாதா? என்று நீங்கள் கேட்கலாம் ஆனால் இதிலுள்ள பிரச்சினை யாதெனில் இவர்கள் சில முக்கிய பதவிகளில், இருப்பிடங்களில் உள்ளவர்களுக்கும் பட்டங்களை வழங்கி வைத்திருக்கிறார்கள் ஆக இது தொடர்பில் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை, மேலும் சட்ட ரீதியாகவும் இதனை அணுகுவது கடினம் காரணம் ஒரு ஜப்பானியப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியிருப்பதாகவே அது அமையும் அதில் சட்டரீதியாகப் பிழை காண முடியாது. அது சரி, இவர்கள் டாக்டர் பட்டம் மட்டுமா வழங்குகிறார்கள்? பேராசிரியர் பட்டமும், கௌரவ தூதர் பட்டமும் (அதாவது தமது பெயருக்கு மன்னால் Hon. என இட்டுக்கொளள முடியும்) வழங்குகிறார்கள். பொதுவாகப் பாராளுமன்ற உறுப்பினர்களும் மிக உயர் பதவியிலுள்ளவர்களும் பாவிக்க வேண்டிய கௌரவ. எனும் பதத்தை இவர்கள் தமக்குதட தாமே சூட்டிக்கொள்ளும் கேவலமும் நடக்கிறது. இதைவிட மோசம் பேராசிரியர் பட்டம் வழங்குவது. கௌரவ பேராசிரியர் எனச் சான்றிதழ் வேறு அளிக்கிறார்கள். எப்பேர்ப்பட்ட பட்டமது அதை ஆரம்பப்பாடசாலை ஆசிரியர்கள் கூட இங்பே போட்டுக்கொள்கிறார்கள்.

அடுத்த எனது தேடல் இந்தப் பட்டம் பெற்றுக்கொண்டவர்கள் பக்கம் போனது, கொஞ்சம் அலசிப் பார்த்தேன் - முதலாவதாக எனது தேடலில் நான் கண்டத ஒரு இரண்டாம் நிலைப் பள்ளி ஆசிரியரை. அவர் ஒரு பட்டதாரி கூட இல்லை மாறாக பயிற்றப்பட்ட ஆசிரியர் அவர் டாக்டர்.பேராசிரியர் மற்றும் கௌரவ எனும் பட்டங்களைப் பெற்றுக்கொண்டிருக்கிறார். அடுத்ததாக நான் கண்டது ஒரு தனியார் கல்வி நிலையத்தில் ஆங்கிலம் மற்றும் கணணி கற்பிக்கும் ஒருவரை. அவரது விளம்பரம் பத்திரிகையில் வந்திருந்தது அதில் அவரது பெயருக்கு முன்னால் கௌரவ. டாக்டர் எனப் போடப்பட்டிருந்தது, உடனே அவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு கொஞ்சம் கடினமான ஆங்கிலத்தில் பேசிப்பார்த்தேன், தடுமாறிவிட்டார் - உடனே நான் தாங்கள் எந்தப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றீர்கள் எனக் கேட்ட போது பதிலேதும் இல்லை தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது - பின்னர் நண்பர்களுடன் சேர்ந்து அலசியதில் அவர் உயர்தரம் கூட சித்தியடையவில்லை என்பது அதிர்ச்சித் தகவலாக வந்தது. அடுத்ததாக இந்த டாக்டர் பட்டத்தை அதிகமாகப் பெற்றிருப்பவர்கள் யார் தெரியுமா? பல முதலாளிகள் - குறிப்பாக பெரியளவில் பலசரக்கு, அரிசி, மீன் என வியாபாரம் செய்யும் முதலாளிகள். அதைவிட சில அரசியல்வாதிகளும் இந்த டாக்டர் பட்டத்தைப் பெற்றிருக்கிறார்கள்.

இதெல்லாம் சரி - இதை நான் எழுதவும் இது தொடர்பில் தேடவும் என்னைத் தூண்டிய சம்பவம் என்ன தெரியுமா? எனக்கு நண்பர் ஒருவரின் உறவினா ஒருவரை அண்மையில் சந்தித்தேன் அவர் இங்கிலாந்தில் மனோ த்துவத் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றவர் அதைவிட பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொ்டர்பிலும் கலாநிதிப் பட்டம் பெற்றவர் - அவரோடு பலதரப்பட்ட விடயங்களைப் பேசி விவாதித்து விட்டு விரடைபெறும் வேளை அவரது தொடர்பு அட்டையை என்னிடம் தந்தார் அதில் அவரது பெயரும் அதன் பின்னால் 5-6 பட்டங்களும் இடம்பெற்றிருந்தன அதில் 2 கலாநிதிப் பட்டங்களும் உள்ளடக்கம். அதைப் பார்த்துவிட்டு நீங்கள் ஏன் டாக்டர் எனப் போட்டுக் கொள்ளவில்லை எனக் கேட்டேன் அதற்கு அவர் பிறகு எனக்கும் உங்கள் அமைச்சருக்கும் (இவ்வமைச்சரது பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை) என்ன வித்தியாசம்? நான் டாக்டர் பட்டம் போட்டுக் கொள்ளப் படிக்கவில்லை, எனது திறனை மெருகேற்றப் படித்தேன் என்றார். அவர் அன்று சொன்ன விடயம் என்னை மிகவும் உறுத்திற்று - அடடா உண்மையாப் படித்து பட்டம் பெற்றவனே இன்று அந்தப் பட்டத்தைப் போட்டுக்கொள்ள வெட்கப்படுகிற அளவுக்கு இந்த போலி (அதாவது கௌரவ) டாக்டர்கள் செய்து விட்டார்களே என எண்ணி வருத்தம் கொண்டேன் அதன் பின்பு தேடிய தகவல்கள் தாம் இவை.

“என்று தணியும் இந்த மடமையின் மோகம்?”

Jul 22, 2009

பெருமை மிகு வேத்தியனாய்...

கொழும்பு மாநகரின், கொழுத்த வீதிகள்
சுட்டெரிக்கும் வெய்யிலிலும் குளிர் வீசும் மரங்கள்
சுற்றும் வீதியெல்லாம் மாபெரும் நிலையங்கள்
எல்லாவற்றிற்கும் நடுவில் இதயமாய் ஒரு ராஜ்ஜியம்….
மாபெரும் சாம்ராஜ்ஜியம்…. வேத்தியக் கல்லூரி….


மணி மகுடந் தரித்த பழம் பெருமையின் வதனம்
தூர இருந்து பார்ப்பவர்க்கெல்லாம் கோயிற் கோபுரமாய்…
அந்த வதனம் கூறும் ‘கற்க அன்றேல் விலகுக’
வளரும் தலைவர்களின் ஆதர்ஷ வரிகளாய்…..
திருவதனம் மிளிரும் எங்கள் வேத்தியத் தாய்…..

வெள்ளியின் அழகில், வேத்திய முத்திரையின் பெருமையில்
வாயிலில் வரவேற்கிறது ‘போக் கேட்ஸ்’ - பூரிப்புடன்…
வருக வருகவென தலையசைத்து, குழலிசை பயின்று
வரவேற்கும் பச்சைப் பசேல் மூங்கில்கள்….
வந்தாரை வரவேற்கும் பண்பாடு எங்கள் தாயின் பெருமை…

பச்சைப் புல்வெளியும், அழகிய பூவனமும் -
இனிய மரநிழல்களும் தரும் பருத்த இனிமையிலே…
பல்லாண்டுப் பழமை கூறும் அரிய கல்வெட்டின் அணைப்பிலே
வேத்தியச் செருக்குடன் நிமிர்ந்து நிற்கும் வாயிற் கோபுரங்கள்….
பல நன்மக்களைப் பெற்று பெரிதுவந்த பெருமையினால்…

தன் மக்களைச் சான்றோர்களாய்க் கண்ட எம் தாய்
மண்டபம் சூழ அவர்கள் முகங்களையும், பெயர்களையுங்கொண்டு
பெருமை கொள்கிறாள்….. நாமும் பூரிப்படைகிறோம்!
ஆயிரமாயிரம் சான்றோர்களை உருவாக்கிய தாய் பெருமையடைகிறாள்…
அந்தத் தாயின் மடியில் தவழ்வதால் நாமும் உயர்வு பெறுகிறோம்…

ஐயிரண்டு திங்கள் எமைச்சுமந்து காக்கிறாள் ஒருதாய்….
பதின்மூன்று வருடங்கள் எமைச்சுமந்து உய்விக்கிறாள் இத்தாய்…
கல்வியாகட்டும், விளையாட்டாகட்டும், கலையாகட்டும், வேறு திறனுமாகட்டும்
வேத்தியத்தாய் தன் குழந்தைக்கு ஊட்டாத செல்வமென்றொன்றுண்டோ?
அதனாலன்றோ அவள் நன் மக்களையே இப்பாரினுக்குத் தருகிறாள்….

அவள் தந்த அமுதமெல்லாம் சுவைத்த களைப்பொடு, அந்தக் களிப்பொடு
நூற்றைம்பத்தாறு திங்கள் கடந்தாயிற்று, காலமும் சொல்லாமலே ஓடிற்று…
தாய் எமைக்காத்து, எமக்கறிவு+ட்டி வளர்த்த காலம் முடிந்து
நாம் நாமாக வாழவேண்டிய காலம் வந்து விட்டது….
தாயைப் பிரியும் சோகம், நோயிலும் கொடியதன்றோ?

எமை வளர்த்து, பெருமை தந்து, வாழ வழிசமைத்தல் தாயின் கடன்
வாழ்வாங்கு வாழ்ந்து பெருமைபெற்று தாயைக் கௌரவித்தல் எம்கடன்
அந்த ஆயிரமாயிரம் சான்றோர்களுடன் நாமும் எம் தாய்க்குப்
பெருமை சேர்க்கும் காலம் வந்துவிட்டது - அதுவே மகன் தாய்க்காற்றும் உதவி!

பெருமை மிகு வேத்தியனாய், வேத்திய நண்பர்களுடன் விடைபெறுகிறேன்….

Jul 17, 2009

இசையரசிக்கு அஞ்சலிகள்!





கர்நாடக இசைத்துறையில் அரசியாக இருந்து...
தொண்ணூறாவது அகவையிலே இவ்வுலகை நீத்த
டி.கே.பட்டம்மாள் அவர்களுக்கு
எனது மனமுருகிய அஞ்சலிகள்!!

இலங்கையில் வளி மாசுக் கட்டுப்பாடு.

அண்மைக்காலமாக இலங்கையில் போக்குவரத்துச் சாதனங்களினால் (அட... வாகனங்கள் தான்) வெளியிடப்படும் காபன் கழிவகளால் வளி மாசு ஏற்படுவதைக் குறைக்க (தடுக்க முடியாதே!) வாகனங்கள் வருடாவருடம் பெற வேண்டிய வாகன வரி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு புகை வெளியேற்றத் தராதரச் சான்றிதழ் பெற வேண்டும். அதாவது குறித்த வாகனமானது குறிப்பிட்ட அளவிலான காபனையே வெளியேற்றுகிறது எனச் சான்றிதழ் பெற வேண்டும், பரிசோதளையின் போது வாகனம் குறிக்கப்பட்ட எல்லையளவுக்கு அதிகமாக வளியை மாசுபடுத்துவது கண்டறியப்பட்டால் குறித்த வாகனம் பழுதுபார்க்கப்பட்டு வாகனக் கழிவு வெளியேற்றல் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் (சுருக்கமாக பச்சைச் சான்றிதழ்) பெறும் வரை வாகன வரி அனுமதிப்பத்திரம் புதுப்பிக்கப்பட முடியாது - அப்பத்திரம் இல்லாமல் வாகனங்களைப் பயன்படுத்துவது சட்டத்திற்கு முரணாண
து.

இந்த பச்சைச் சான்றிதழை வழங்குவதும் அது தொடர்பான பரிசோதனைகளைச் செய்வதும் யாரெனத் தெரியுமா? அரசாங்கமோ, போக்குவரத்துத் திணைக்களமோ அல்ல மாறாக லாஃப்ஸ் பிடிமானங்கள் தனியார் குழுமத்தின் ஒரு அங்கமாக உருவாக்கப்பட்டிருக்கும் லாஃப்ஸ் எகோ ஸ்ரீ தனியார் நிறுவனமாகும். இலங்கையின் பல பகுதிகளிலும் பரிசோதனைக் கூடங்களை அமைத்திருக்கிறார்களாம், ஆனால் நான் ஒரு பரிசோதனைத் தளம் எங்கே இருக்கிறது எனக் கண்டறிய மிகவும் கஷ்டப்பட்டு விட்டேன். பரிசோதனைகளும் சான்றிதழும் இலவசமல்ல. மோட்டார் சைக்கிளுக்கு ரூ.284.50 முதல் கார்களுக்கு ரூ.759ம், பேரூந்துகளுக்கு ரூ.696ம், லொறிகளுக்கு ரூ.1138.50ம் அறவிடுகிறார்கள். பரிசோதிக்கப்பட்டுப் பழுதுபார்க்கப்பட வேண்டியிருந்தால் குறிப்பிட்ட பழுதுபார்ப்பு வேலைகள் முடிந்த பின்பு முதலாவது மீள் பரிசோதனை இலவசமாச் செய்து தரப்படும். இது தொடர்பில் மேலுமறிய இங்கே சொடுக்கவும்.

சரி, நான் இப்பதிவை எழுதுவதற்குக் காரணம் இந்தத் தகவல்களைத் தொகுப்பது அல்ல. சாதாரணமாகப் பாதையில் போகும் போது சில பேரூந்துகளையும், சில வாகனங்களையுந்தவிர 90மூ வாகனங்கள் பெருமளவு கரும்புகையை வெளியேற்றுவதில்லை நாம் அனைவருமே கண்டு கொண்டிருப்போம். இப்போது இவற்றுக்கெல்லாம் பரிசோதனையும் பச்சைச் சான்றிதழும் அவசியமாக்கப்பட்டிருப்பது நல்லது (கொஞ்சம் அலைச்சல் தான்). சூழல் பாதுகாப்புத் தொடர்பில் மனிதன் விழிப்படைய வேண்டிய அவசரக் காலகட்டம் வந்து விட்டது. இந்த வாகனங்களுக்கெல்லாம் புகைப் பரிசோதனையும், கட்டுப்பாடும் விதித்த அரசாங்கம் அதிகமாக புகையை வெளியேற்றும் ஒரு போக்குவரத்துச் சாதனத்தை மறந்து விட்டது.

இன்று முச்சக்கரவண்டியில் வெள்ளவத்தைக் கடற்கரையோரம் பயணிக்கும் போது புகையிரதமொன்று கரும் புகையைக் கக்கியபடி சென்றது. படத்தில் நீங்கள் காணும் புகைமூட்டம் அந்தப் புகையிரதம் வெளியேற்றிய புகைக்கழிவே. கொஞ்சம் முதல் பட்மெடுத்திருந்தால் இன்னும் அழகாகத் தெரிந்திருக்கும், ஆனால் அது கக்கிய புகையில் கொஞ்சம் மூச்சடைத்துத் தடுமாறிவிட்டேன். “புதுமைகள்” செய்யும் அரசாங்கம் (அட... வேற மாதிரியென்றும் நினைக்க வேண்டாம்) இதையும் கவனிக்கவும். கட்டுப்பாடு விதித்த எல்லா வாகனங்களையும் விட அதிக புகையை புகையிரதங்கள் வெளியேற்றுகிறது. இது புகையிரதப் பயணிகளுக்கு மட்டுமன்றி புகையிரதம் பயணிக்கும் பாதையருகே இருப்பவர்களையும் பெருமளவு பாதிக்கிறது.

Jul 16, 2009

தமில்...

தவறு விடவில்லை நான்….
நிச்சயம்…அது…நிச்சயம்!
பக்தியுடனேயே தமிழ் கற்றேன்…
விடுவேனா தவறு…அதில்…

கணணித் தட்டச்சுப் பிழையுமல்ல…
நானறிவேன்… உண்மை!
ஒருமுறைக்கிருமுறை சரி பார்த்ததல்லவா…
வரவே வராது பிழை….

எல்லாம் சரியாயிருக்க…
தமிழ் - தமிலாகிய கதை தானென்ன?
இது இன்றைய யதாhத்தத்தின் விம்பமோ?
இல்லை…இலகுவாக - காலஞ்செய்த கோலமோ?

கேள்விக்கு மேல் கேள்விகள்….
பாவம் நான்… எனக்குப் பதில்தான் தெரியவில்லை…
ஏனெனில் நான் படிக்கும் “சிலபசில்”…
இந்தக் கேள்வி;க்கெல்லாம் பதிலில்லை…

இதற்குப் பதில் தேட நேரமில்லை என்னிடம்…
நேரமிருந்தும் ஆர்வமில்லைப் பலரிடம்…
ஆனால் சாட்டு மட்டும் உண்டு எம்மிடம்…
“ஒரு “ல” தானே வித்தியாசம்... - எல்லாம் ஒன்றுதான்”

தமிழ், தமிலாகி விட்டால் பரவாயில்லை…
மொழி, பண்பாடு, பற்றி எமக்கென்ன கவலை….
வாயிற்கு வுருவதைப் பேசுவோம் -
மற்றவருக்குப் புரிந்தால் சரி தானே!
நண்பா கவனம்… நாளை இந்தத் தவறுகளால்
உன் “வாழ்க்கை” சில வேளை “வழுக்கை” ஆகிவிடும்!

(தமிழைத் - தமில், டமில் எனவாறெல்லாம் கொச்சைப்படுத்தும் ஈகர் கண்டு எழுதினேன் - உண்மையில் மொழி மீதான பற்றும் ஆர்வமும் தமிழரிடையே பெருமளவில் குறைந்து வருகிறது. காலப்போக்கில் தமிழ் தமிலாகி டமிலாகி தமிங்கிலிஷ் ஆகி மண்ணாகிப் போக இத்தகைய சிறிய அலட்சியங்கள் கூடக் காரணமாக இருக்கலாம்!)

Jul 13, 2009

கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ...

அகதியாய் கூடாரம் நிறைந்த முகாமில் அடைபட்டு வருந்தும் ஒரு தாயின் தாலாட்டிது.... (எத்தனையோ பேர் சொன்ன நிதர்சனத் தகவல்களின் விளைவாக உணர்ச்சியின் உச்சத்தில் எழுதியது)


கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ...
குண்டுகளும் இனி விழாது
இரத்தமும் இனி ஓடாது
நிம்மதியாய் நீயுறங்க
தாயின் மடியிங்குண்டு
கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ...

கண்ணே கண்மனியே கண்ணுறங்காயோ...
யுத்தமும் இனியில்லை
சத்தமும் இனியில்லை
நித்தமும் நீயுறங்க
அன்னைமடி இங்குண்டு
கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ...

கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ...
கெதியா நீ உறங்கிவிட்டால்
அம்மா நானும் உறங்கிடலாம்
விடிய முன்ன எழும்பி நானும்
“மல” வரிசையில் நிண்டிடணும்
கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ...

கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ...
கெதியா நீ படுக்காவிட்டால்
நாளைக்கும் நான் பிந்திடுவன்
பிந்தியங்க போய்விட்டால்
பிறகு சாப்பிட ஒண்டும் கிடைக்காது
கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ...

கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ...
கொஞ்சங்கூடக் கலங்காதே
சாப்பாடு கிடைக்காட்டியும்
கடைசி சொட்டு உள்ள வரை
தாய்ப்பால் என்றும் உனக்குண்டு
கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ...

கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ...
என்ட பிள்ளை உன்ளை நானும்
நல்லாத்தான் வளர்த்திடுவன்
இந்தக் முகாமில் உள்ளதில
வள்ளிசாய் உனக்குச் செய்திடுவன்
கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ...

கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ...
கனவு நீயும் காணுறாயோ
விடிவு காலம் பிறக்குமெண்டு
தமிழனாய் நீ பிறந்த நாளிலல்லோ
இருள் உன்னைப் பிடிச்சிட்டுது
கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ...

கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ...
தமிழனெண்டு நீ சொல்லிடாதே
உணர்ச்சி வசமும் பட்டிடாத
சுரணையற்ற ஈனக் கூட்டமடா
கொடியுறவெல்லாம் சுத்தப் பொய்களடா
கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ...

கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ...
நாளையொன்று உனக்கு இருக்குதெண்டு
நம்பிக் கொண்டு இருக்கிறன்
நாளை என்ன நடக்குமெண்டு
ஆரறிவார் என்மகனே?
கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ...

கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ...
கெதியா நீ தூங்கிவிடு
விடியலுக்கு நேரமாச்சு
அம்மா நான் தண்ணீ கொஞ்சம்
பக்கற்றில எடுத்துட்டு வாரன்
கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ...

Jul 8, 2009

கூட்டணிகள் என்ற சாபக்கேடு

“கூட்டணிப் பிளவுகள்”, “கட்சித் தாவல்கள்” இவையெல்லாம் நாம் அதிகம் அறியாத விடயங்களல்ல, மாறாக தினந்தினம் பார்த்துக்கொணடிருக்கும் “கூத்துக்களே!”. தனிக்கட்சிகள் அறுதிப் பெரும்பான்மையைப் பெறமுடியா நிலையில், ஆட்சியைக் கைப்பற்ற பயன்படுத்தும் “மாத்திரையே” கூட்டணி. காசு, சொகுசு, அமைச்சுப் பதவிகள். இதர சலுகைகளைப் பெறறுக்கொண்டு சிறு சிறு கட்சிகள் கூட ஆட்சிக்காதரவளிக்கின்றன. விளைவு “உறுதியற்ற அரசாங்கம்”.

சமகால இலங்கை, இந்திய அரசாங்கங்களின் நிலையைப் பார்த்தால் இந்த விளைவு புரியும். இலங்கை அரசாங்கமோ ஏறத்தாழ பாராளுமன்றத்தின் பாதியளவுக்கு அமைச்சர்களை மற்றும் பிரதி அமைச்சர்களை நியமித்து இயங்கிக் கொண்டிருக்கிறது. சத்தியமாக இலங்கையில் எத்தனை அமைச்சர்கள் இருக்கிறார்கள் என்றெனக்குத் தெரியாது - சில வேளைகளில் ஒரே துறைக்குப் பல அமைச்சர்கள் உண்டு - உதாரணமாக தேசத்தைக் கட்டியெழுப்பும் அமைச்சைக் குறிப்பிடலாம். இந்த “மெகா” அமைச்சர்களுக்கான செலவே பல நூறு கோடிகள். இந்தியாவிலோ “கோடிகளைக் கொட்டிக்கொடுத்து” ஆட்சியைக் காப்பாற்றியது காங்கிரஸ். இவையெல்லாம் ஜனநாயகத்திற்கெதிரான அநியாயச்செயல்கள்.

மேலும் கூட்டணி அரசாங்கங்களின் உறுதி சந்தேகத்திற்குரியது. அண்மையில் இந்தியாவில் ஏற்பட்ட நிலைமையே இதற்குச்சாட்சி. இடதுசாரிகளின் ஆதரவு பின்வாங்கப்பட்டதன் பின் ஆட்சியைக் காப்பாற்ற காங்கிரஸ் பட்டபாடு ஒரு தேர்தலைச் சந்தித்ததற்கு ஒப்பானது. இலங்கையிலோ கதை வேற - இலங்கை அரசாங்கம் எதிர்க்கட்சி உறுப்பினர்களை அமைச்சர் பதவி கொடுத்து வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கிறது இதனால் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி மட்டுமல்லாது ஏனைய சிறிய கட்சிகளும் திண்டாடிக்கொண்டிருக்கின்றன.


சித்தாந்த ரீதியாகப கூட்டணி முறையில் பல சிக்கல்கள் உண்டு. முதலாவது கொள்கை. இரண்டு முரண்பட்ட கொள்கைகளையுடைய கட்சிகள் “சலுகைகள்” காரணமாகக் கூட்டணி அமைக்கும் போது பின்னர் வரக்கூடிய கொள்ளை முரண்பாடுகள் பற்றி சிந்திப்பதில்லை. இன்று இந்தியாவிலும், இலங்கையிலு் ஆளும் கூட்டணியில் ஏற்பட்ட பிளவுகளுக்கும், முரண்பாடுகளுக்கும் கொள்கை(ளை!) வேறுபாடுகளே பிரதான காரணிகளாயின. காங்கிஸின் “அமெரிக்கப்” போக்கு முதலாளித்துவத்தை எதிர்க்கும் இடதுசாரிகளிடையே காய்ச்சலை ஏற்படுத்தியிருக்கலாம், அதே போல இலங்கையில் அரசாங்கத்தின் யுத்தந்தவிர்ந்த ஏனைய போக்குகள் ஜே.வி.பிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் இவையெல்லாவறறையும் கூட்டணியமைக்க முன்பே இவர்கள் சிந்தித்திருக்க வேண்டும். காலச்சூழலுக்கு தகுந்தாற்போல தமது கொள்கைகளை மாற்றிக்கொண்டும், சலுகைகளுக்குத் தக்கதாக வளைந்து கொடுத்துக் கொண்டும் இவர்கள் நடத்து நாடகம் அரசியலின் சாபக்கேடேயன்றி வேறொன்றுமில்லை.

ஒரு தனியான கட்சி, மக்கள் விரும்பத்தக்க கொள்கையோடும் நடத்தையோடும் செயற்படுமாயின், அவை எவ்வகைக்கூட்டணித் தேவையுமின்றி ஆட்சியமைக்கும். ஆனால் இன்றைய கட்சிகள் மக்களால் விரும்பப்படாத மாறாக வெறுக்கப்படுவனவாக மாறிக்கொண்டு வருவதே கட்சி அரசியலின் தோல்வியை இந்த 3ம் உலக நாடுகளில் நிரூபித்து வருகிறது.

இந்திய தேர்தல் முறைமையின்படி கட்சிச் செல்வாக்கில்லாமலேயே, மக்களிடையே செல்வாக்கிருப்பின் தேர்தலில் வெற்றியீட்டும் வாய்ப்புக்கள் மிக அதிகம். ஆனால் அப்படிொரு தேசத்திலும் இந்தக் கட்சிகளின் கபட நாடகம் அதியளவில் அரங்கேறிவருவது கவலைக்குரியது.

இலங்கையில் விகிதசமப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் தேர்தல் இடம்பெறுவதால் கட்சிமுறை அவசியமாகிறது. விகிதசமத் தேர்தல் முறையினால் ஒரு தனிக்கட்சி ஆட்சியமைப்பது சாத்தியமில்லை. 1978 யாப்பின் படி நடந்த எத்தேர்தலிலும் தனிக்கட்சிொன்று அதிக பெரும்பான்னை பெற்றதில்லை, ஆகவே ஆட்சியமைப்பில் கூட்டணி அவசியமாகிறது. எனினும் இந்த கூட்டணித் தத்துவம் இன்று நாட்டையே கலங்கடிக்கும் “கூத்தாக” மாறியிருப்பது வருந்தத்தக்கது.

அரசியல் பயின்ற, அதன் புனிதம் உணர்ந்த அரசியல்வாதிகள் வரும் வரை இதுபோன்ற சாபக்கேடுகள் தவிர்க்க முடியாதவை! அரசியல் வாதிகளைப் மட்டும் குறை சொல்விப் பயனில்லை - இன்னும் இன்னும் அவர்களுக்கு வாக்கிட்டுக்கொண்டிருக்கும் மக்கள் மேல் தான் முதற்பிழை - அது பற்றி வேறோர் பதிவில்.

Jul 7, 2009

I strongly condemn Daily Mirror on "Royal Chickens Out"

I really want to condemn Daily Mirror for their article titled "Royal Chickens Out", published on Monday 6th July 2009. (Read the article here).

The article says that the Royalists have withdrawn from the Rugby Knockout tournament despite the fact that they became the champions in the league tournament. It also says that Royal has a history of pulling out of tournaments.

Before anything the Daily Mirror and all other readers should note that Royal College does not only concentrate on Sports but also on academic sector too. Royal College has produced very good results in sports as well as in academic side too. As it is noted Royal produces Island wide Top Rankers every year in G.C.E. A/L examinations.

This year the league started a bit late after the case filing saga and it ended on 04th of July 2009. As you may know the Sri Lankan G.C.E. Advanced Level examinations are conducted by the Department of Examinations in the month of August and it is notable that nearly half of the Royal College 1st XV Rugby team is sitting for the G.C.E. A/L examinations this year - to be clear Naren Dhason the captain of the side, Nikira Senanayake - the deputy skipper and most of the pack and some from the line are sitting for the examination this year, thus to concentrate on their studies they need to take at least one month of full studying sessions, Thus they could have decided to pull out from the tournament.

On the other hand I also want to condemn the Sri Lanka Schools Rugby Football Union for having the school based Rugby tournaments in the months of June & July where most of the School Rugby team members sit for their G.C.E. A/L examinations in August.

Please kindly note that unlike any other educational institutions in Sri Lanka - Royal is always balanced with academic and co-curricular activities and do not see a school team with a perspective you see a club team.

கலங்கடிக்கும் வானொலிச் சேவைகள்


நான் விரும்பி வானொலி கேட்டே பல வருடங்கள் ஆகிறது. இப்போதெல்லாம் தற்செயலாக வாகனத்திலோ, தேநீர் கடையிலோ அல்லது வேறெங்காவதோ கேட்டால் தான் உண்டு. நானாக விரும்பி வானொலியைக் கேட்பதே இல்லை - யாராவது விரும்பியே தலைவலியைப் பெற்றுக்கொள்வார்களா என்ன?

உண்மையிலேயே வானொலிச் சேவையென்பது மக்களை மகிழ்விப்பதாகவே இருக்கவேண்டும் ஆனால் ஏதோ ஒரு குழப்பத்தில் இன்று அது அலட்டல் அரங்கமாகிவட்டது. அறிவிப்பு என்பது ஒரு கலை என்பதிலிருந்து தேய்ந்து அலட்டுதலாகிவிட்டது இன்றைய தமிழ் வானொலிகளில். குறிப்பாக இலங்கைத் தமிழ் வானொலிகளை எடுத்துக்கொண்டீர்களானால் எங்களுக்கேயுரிய எங்கள் தமிழ் இந்த வானொலிகளில் இல்லாமல் போய்விட்டது. இது வெறும் தனியார் வானொலிகளில் மட்டுமல்ல - ஒரு காலத்தில் இந்தியாவிலேயும் விரும்பிக் கேட்கப்பட்ட இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தபனச் சேவை கூட இன்று ”எஃப். எம்” சாயலுக்கு மாறினால் தான் பிழைக்க முடியும் என்ற நிலைக்கு வந்துவிட்டது.

சாதாரணமாக நல்ல ஒலிபரப்பாளர் என்றால் அருமையான குரலும் நல்ல ஆளுமையுடன் கூடிய பேச்சும் விரிவான அறிவும் இருக்கவேண்டும். அன்றைய ஒலிபரப்பாளர்கள் அப்படியிருந்தார்கள். இன்றும் கேட்கக் கேட்கத் திகட்டாத குரல் பி.எச.அப்துல் ஹமீதினுடையது - அவர் இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கூட நல்ல தமிழில் நடத்துகிறார். அன்றைய ஒலிபரப்பாளர்களுக்கு அது சாத்தியமாயிற்று ஏனெனில் மக்களின் இரசனையை அவர்களே தீர்மானித்தார்கள் அவர்களிடம் அந்தளவுக்கு ஆளுமை இருந்தது. ஆனால் இன்றோ மக்களது இரசனைக்கேற்பத் தங்களை மாற்றிக்கொள்ளும் அப்பட்டமான கேடு கெட்ட வியாபாரமாக்கிவிட்டார்கள். இதை நான் புரிந்து கொண்டது இலங்கையின் பிரபல தனியார் தமிழ் ”எஃப். எம்” பொறுப்பாளர் ஒருவருடன் உரையாடிய போதேயாகும். அவர் எனது நல்ல நண்பர், அடிக்கடி நாங்கள் பல விடயங்களை விவாதித்துக்கொளவது வழக்கம். ஒருமுறை அவரது வானொலி தொடர்பாக விவாதித்துக் கொண்டிருந்தபோது நான் கேட்டேன் ”நீங்கள் எவ்வளவு தூரம் சிறப்பாகவும், ஆளுமையுடனும் சிந்திக்கிறீர்கள் ஆனால் ஏன் இந்தப் பயனற்ற அலட்டல் நிகழ்ச்சிகளுக்கெல்லாம் நடத்துகிறீர்கள்?” அதற்கு அவர் தந்த பதில் முக்கியமானது ”நாங்கள் என்ன செய்ய?. தரமான நிகழ்ச்சிகளைத் தந்தால் மக்கள் கேட்பதில்லை - வெறும் ஒன்றிரண்டு புத்திஜீவிகளுக்காக நாம் நிகழ்ச்சி நடத்த முடியுமா? அவ்வாறு யாரும் கேட்காவிட்டால் நிகழ்ச்சியின் “ரேட்டிங்” குறையும் அப்படிக் குறைந்தால் விளம்பரங்கள் கிடைக்காது - வயித்துப் பிழைப்பும் நடக்காது” என்றார். உடனே நான் ”ரேட்டிங்கை” தீர்மானிப்பது யார்? என்று கேட்டதற்கு ரேட்டிங்கை சில தனியார் நிறுவனங்கள் செய்கின்றன. ஒரு சிறப்பு மீற்றர் பொருத்தப்பட் வானொலிப் பெட்டியை எழுமாற்றாகத் தெரிவுசெய்யப்பட்ட சிலருக்கு வழங்குவார்கள், அவர்கள் குறிப்பாக நடுத்தர அல்லது அதற்குக் கீழான வரையறைக்குட்ப பட்ட மக்களாகவே அதிகளவில் இருப்பார்கள். அவர்கள் எந்த நேரத்தில் எந்த அலைவரிசைளைக் கேட்கின்றார்கள் என்பது அந்த மீற்றரில் பதியப்படும் அதன் படி எல்லோரும் அதிகம் விரும்பிக் கேட்கும் நிகழ்ச்சி அதிக “ரேட்டிங்” பெறும் யாரும் கேட்காவிட்டால் “ரேட்டிங்” குறையும் ஆக அந்த மடையன் (அவர் சொன்ன அதே வார்த்தை) எதைக் கேட்கிறானோ அதைத் தான் நாங்கள் போ் வேண்டும் - அப்பதான் பிழைக்கலாம்” - அவர் சொன்னவை நம்பக் கூடியதாகத் தான் இருக்கிறது ஏனெனில் இனறைய அநேகமான ஊடக நிறுவனங்கள் இலாபத்தைப் பார்க்கின்றனவேயன்றி தரத்திற் கவனஞ் செலுத்துவதில்லை. மேற்கூறிய அந்தவானொலிப் பொறுப்பாளரே இந்த பயனற்ற நிகழ்ச்சிகளை நடத்துவதில் விருப்பமற்றவர் ஆனால் வேறுவழியின்றி செய்து வருகிறார்.

இரசிகர்களது இரசனையை ஒலிபரப்பாளர்கள் தீர்மானிக்கும் காலம் போய் அந்த வானொலி ஒலிபரப்பாளரின் கருத்துப்படி யாரோ ஒரு மடையன் தீர்மானிக்கும் அளவுக்கு இந்த “கோபரேட்” நிறுவனங்கள் எங்களை மொழியையும், இரசனையையும் கொண்டு வந்து விட்டிருக்கின்றன. அதனால் இவர்களும் அலட்டிக்கொண்டே இருக்கிறார்கள். அது சரி என்றை மறந்துவிட்டேனே இன்று இலங்கையில் தமிழ் வானொலித் துறையில் அதிகமிருப்பவர்கள் நானறிந்த மட்டில் உயர் தரப் பரீட்சையில் கூட சிறப்பாக சித்தியடைய முடியாதவர்களே - சும்மா அலட்டுவதற்கு முதுமாணிப் பட்டமா தேவை?

நான் இதை எழுதுவது யாரையும் தாக்கவோ புண்படத்தவோ அல்ல மாறாக இன்றைய தமிழனது இழிவு நிலையை எடுத்துக்காட்ட - எத்தனையோபேர் இந்த மொழியையும் கலாசாரத்தையும் கட்டிக்காக்க பலபாடுகள் படும் வேளையில் அற்பத்தனமாக நாம் சில பயனற்ற காரியங்களைச் செய்துகொண்டிருக்கின்றோம் என்ற ஆதங்கம் தான் இதை எழுத வைத்தது. வாழ்ககைக்கு சினிமா பார்க்கலாம் ஆனால் சினிமாவே வாழ்கையாகிவிடக்கூடாது - சினிமாவை மையப்படுத்தி எம் தமிழினம் வாழக் கற்றுக்கொண்டதன் வினளவுதான் இன்று நாங்கள் உணர்ச்சியும், உயர்ச்சியுமற்ற ஒரு இனக்குழுவாக இருக்கின்றோம்.

இந்த வேளையில் உலகத்தின் எல்லா மூலைகளிலிருந்தும் எம் தமிழின் உயர்ச்சிக்காகப் பாடுபடும் நல்லுள்ளங்களுக்கு எனது நன்றி கலந்த வணக்கங்கள்.

பி.கு. - இலங்கையின் பிரபல தமிழ்த் தொலைக்காட்சியொன்றில் நிகழ்ச்சி நடத்தும் விருது பெற்ற பெண் அறிவிப்பாளர் ஒருவர் மகாபாரதமும், இராமாயணமும் இதிகாசங்களல்ல எனக் கூறிக் குழப்பியதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Jul 3, 2009

காலங்கடந்த ஞானம்

அண்மையிலே ரவி அவர்களின் “ரவி ட்ரீமஸ்” வலைப்பதிவில் பழைய பதிவுகளை பார்த்துக்கொண்டிருந்தேன் ”தமிழில் கையெழுத்துப் போடுதல்” பற்றி அருமையாக எழுதியிருந்தார். தமிழில் கையெழுத்து - நான் தமிழன் அப்படியிருக்க கையெழுத்து மட்டும் ஏன் ஆங்கிலத்தில்? - அந்தப் பதிவின் தாக்கம் என்னை இவ்வாறெல்லாம் சிந்திக்கவைத்தது. ஒரு வேளை பலவருடம் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டிருந்ததன் விளைவோ? ”அடிமையின் மோகமோ”? இல்லை அறியாமையின் நிலையோ? - தமிழன் இன்று தமிழைப் பேசக் கூச்சப்பட்டுக்கொண்டடிருக்கின்றான். பிரெஞ்சுக்காரனும், இத்தாலியனும் தங்கள் மொழியை மறந்து ஆங்கிலத்தைக் காதலிக்கவில்லையே? ஏன் தமிழனாய்ப்பிறந்து விட்ட நாம் மட்டும் சுயமிழந்து வாழ்கின்றோம்? - உணர்ச்சியின் உச்சத்தில் வார்த்தைகள் காட்டாறாய் என் சிந்தையில் பாய்கிறது.


சிர வாரங்களுக்கு முன் கனடாவிலிருந்து எனது சித்தப்பா தொலைபேசியில் என்னோடு பேசிக்கொண்டு - இல்லை, இல்லை - விவாதித்துக் கொண்டிருந்தார். நான் தமிழ், தமிழன் பற்றி உணர்ச்சி வசமாகப் பேசிக் கொண்டிருந்தேன், திடீரென ”தமிழ் - தமிழ் என்கிறாய் தமிழிலேயா கையொப்பம் இடுகிறாய்?” என்று கேட்டார் - ஒரு நொடி தாமதித்த நான் விவாதத்தில் தோல்வியடைய மறுத்து ”ஆம்” எனப் பதிலளித்துவிட்டேன் - அவரும் ”நல்லது - ஆனால் எத்தனை தமிழ்ர்கள் அப்படி விரும்பிச் செய்கிறார்கள்?” என்க கேட்டு விட்டு அத்தோடு வேறும் சில விவாதங்களின் பின் தொலைபேசியழைப்பு முற்றிட்டு. அன்று நான் சொன்ன அந்தப் பொய் “என்னை நானே ஏமாற்றிவிட்டேனா?” என எண்ணத் தோன்றியது.


தமிழனென இப்பாரதனில் பிறந்து தமிழை மறப்பேனானால் தமிழன் என்பதன் அர்த்தம் என்ன? 20 வயதை எட்டிக்கொண்டிருக்கும் தருணத்தில் இந்த ஞானம் பிறந்தது. எத்தனை மேடைகளில் ”தமிழ் - தமிழ்” என முழங்கியிருப்பேன், எத்தனை தமிழ் நூல்களைப் படித்திருப்பேன், உயர்தரத்தில் தமிழை ஒரு பாடமாகவும் எடுத்துக்கொண்டேன், ஆனால் இந்த சிறிய வி்டயத்தை ஏன் நான் இவ்வளவு நாளாக கவனிக்கவில்லை? பதிலில்லை என்னிடம். இன்று ஒரு உணர்வு என்னை உறுதியான முடிவு எடுக்கத் தூண்டியது - இன்று முதலட தமிழிலேயே கையொப்பம் இடுவேன் - இதில் எந்த இனவெறியோ, மொழிவெறியோ இல்லை. என் மொழியை நான் மதிக்காவிட்டால் மற்றவனா வந்து சீராட்டிப் பாராட்டுவான்?