Showing posts with label Condemns. Show all posts
Showing posts with label Condemns. Show all posts

Jun 16, 2011

இனி இலங்கைக்கு என்ன நடக்கும்? (சனல் 4 அண்மையில் வெளியிட்ட யுத்தக்குற்ற ஆதாரங்களின் தொகுப்புக் காணொளியின் பின்...)

உலகே அதிர்ந்து போனது.... காணொளியைப் பார்க்க முடியாது வேதனையில் எழுந்து சென்று விட்டவர்கள் பலர், காணொளியைக் கண்டபின்னர் தூக்கத்தைத் தொலைத்தவர்கள் பலர்,காணொளியைக் காணும் போதே தம்மையறியாமலேயே கண்ணீர் சிந்தியவர்கள் பலர். இது போலெல்லாம் உலகில் நடக்குமா? என்று யோசித்திருந்தவர்கள், இலங்கையிலே அதுவும் நமது இனமக்களுக்கு நடந்த இந்தக் கொடூரத்தைக் கண்டு தாங்கிக்கொள்ள முடியாமல் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறார்கள். பல காணொளிகள் முன்பே வெளிவந்திருந்தாலும், இந்த தொகுப்பைக் காணும் போது நெஞ்சு கனக்கிறது... மனது “நீதி வேண்டும்” என்று கொதிக்கிறது. 

செவ்வாய்கிழமை இரவு 11 மணியளவில் பிரித்தானியாவின் சனல் 4 ஒளிபரப்பிய “இலங்கை - கொலைக்களம்” எனத் தலைப்பிடப்பட்ட காணொளி இலங்கை யுத்தத்தின் இறுதி நாட்களின் மறுபக்கத்தை, பொதுமக்கள் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டதை, சரணடைந்த போராளிகள் சர்வதேச சட்டத்திற்கெதிராக கொல்லப்பட்டதை, பெண்கள் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டதை, காணொளி மூலமும், நேரச் சாட்சிகளின் வாக்குமூலமாகவும் உலகத்திற்கு முன்னர் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. ( காணொளியை இங்கு காணலாம் - http://www.channel4.com/programmes/sri-lankas-killing-fields/4od ) 

உலகமே அதிர்ந்து போயுள்ள நிலையில் இன்று உலக நாடுகள் சுதந்திரமான சர்வதேச விசாரணை ஒன்றிற்காக இலங்கையை வலியுறுத்தி வருகிறது - இலங்கை அரசாங்கமும் வழமைபோல குற்றச்சாட்டுக்களை மறுத்தும், பரிசீலிப்போம் என்று சாக்குப் போக்குச் சொல்லி காலதாமதப்படுத்தியவண்ணம் இருக்கிறது. காணொளியைக் கண்டு அதிர்ச்சியுற்ற பிரித்தானிய வெளிவிவாகர அமைச்சர் அலிஸ்ரெயார் பேட் பின்வருமாறு தனது கருத்தைப் பதிவு செய்திருந்தார். 

‎'“I was shocked by the horrific scenes I saw in the documentary that was broadcast on 14 June. ..... The recent UN Panel of Experts’ report, this documentary and previously authenticated Channel 4 footage, constitutes convincing evidence of violations of international humanitarian and human rights law. The whole of the international community will expect the Sri Lankans to give a serious and full response to this evidence.' - British Foreign Minister Alistair Burt. 

(முழுமையான அறிக்கையை இங்கு காண்க - http://ukinsudan.fco.gov.uk/en/news/?view=News&id=615115382 )

இதனைத் தொடர்ந்து இலங்கை அரசாங்கம் மீதான சர்வதேச அழுத்தம் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே இலங்கை இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு நடவடிக்கையொன்றை எடுக்காததன் காரணமாக இந்தியா வெளிப்படையான ஆதரவை இலங்கைக்கு வழங்காது மௌனம் சாதிக்கிறது, மேலும் தமிழக சட்ட மன்றத்தில் இலங்கைக்கு எதிராக எடுக்கப்பட்ட தீர்மானம், நடைமுறையில் பயனேதுமில்லாவிட்டாலும், அரசியல் ரீதியில் ஒரு அழுத்தமாகவே காணப்படுகிறது. இவற்றைவிட ஐ.நா. நிபுணர் குழு அறிக்கைக்கு ஐரோப்பிய பாராளுமன்றம் தெரிவித்திருந்த ஆதரவும், அமெரிக்கா தெரிவித்த ஆதரவும் இலங்கை அரசாங்கத்துக்கு பாரிய அழுத்தத்தைக் கொடுத்துள்ளது. சனல் 4ன் காணொளி ஒளிபரப்பானது இன்னும் இந்த அழுத்தத்தை அதிகரிக்கும். 

இவ்வேளையில் சனல் 4ன் காணொளி தொடர்பான இலங்கை அரசின் பதிலளிப்புக்களில் பல முரண்பாடுகளைக் காணலாம். இலங்கை அரசாங்கத்தின் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல இலங்கை அரசாங்கமானது தனது தடவியல் நிபுணர்களைக் கொண்டு குறித்த காணொளியை மீண்டும் பரீசீலிக்கும் என்று கூறியிருந்தார். 

பின்னர் அல்-ஜஸீராவில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதியின் ஆலோசகரும், தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருமான ரஜீவ விஜேசிங்ஹ, யுத்தக் குற்றம் பற்றிய கேள்விகளுக்குப் பதிலளிக்காது, இக்காணொளிகள் போலியென்றும், இவை புலிகளினால் நடிக்கப்பட்டு எடுக்கப்பட்டிருக்கலாம் என்று முழு யானையை மண்பானைக்குள் மறைக்க முயற்சிக்கும் தனது படித்த முட்டாள்தனத்தை உலகிற்கு மீண்டுமொருமுறை பறைசாற்றியிருந்தார். (குறித்த காணொளியை இங்கு காண்க - http://www.youtube.com/watch?v=sdrCR-X4iH0 )

இது தவிர இலங்கையின் பாதுகாப்புச் செயலாளரும், மஹிந்த ராஜபக்ஷவின் தம்பியுமான கோட்டாபய, சனல் 4 தொலைக்காட்சிக்கு புலி ஆதரவு சக்திகள் இலஞ்சம் ஊட்டி இலங்கையினது, இலங்கையினது இராணுவத்தினதும் பெயரைக் கெடுக்கும் செயலில் ஈடுபட்டிருப்பதாகக் கூறினார். 

இவர்கள் எல்லோருடைய பதில்களிலுமிருந்து நாம் அறிய முடிவுது, இலங்கை அரசாங்கம் அதிர்ந்து போய் இருக்கிறது, செய்வதறியாது திகைத்துப் போயிருக்கிறது. அநேகமான காணொளி ஆதாரங்கள் இராணுவ வீரர்களினால் அவர்களது கைத்தொலைபேசியின் மூலம் எடுக்கப்பட்டவையே என சனல் 4 தெரிவிக்கிறது. ஆகவே யுத்தத்தை வென்றபோது (?! - முடிவுக்குக் கொண்டுவந்தபோது!) இலங்கை அரசாங்கமோ, ராஜபக்ஷவோ இப்பொழுது எழுந்திருக்கும் இந்த நிலையைப் பற்றி யோசித்தே இருக்க மாட்டார்கள், யுத்தக்குற்றம் பற்றி கொஞ்சமேனும் தெளிவிருந்திருந்தால் ஒருவேளை கைத்தொலைபேசிக் கமராக்கள் கடைசெய்யப்பட்டிருந்திருக்கும். 

குறித்த காணொளி போலியானது. இது இலங்கையின் பெயரைக் கெடுக்கும் நடவடிக்கை என மீண்டும் மீண்டும் புலம்பும் அரசாங்கம், நீங்கள் அவ்வளவு சுத்தமானவர்கள் என்றால் சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கு முன்வராதது ஏன் என்ற கேள்விக்குப் பதிலில்லை. சில மேதாவித்தனமான அரசியல்வாதிகள் சர்வதேச விசாரணை என்பது இலங்கையின் இறைமைக்கு எதிரானது என விதண்டாவாதம் புரிவார்கள். இறைமை என்பதே மக்களுடையது, அந்த மக்களே அநியாயமாக, அநீதியான முறையில் கொல்லப்பட்ட, சித்திரவதைசெய்யப்பட்ட, கற்பழிக்கப்பட்ட போது இறைமை என்பது யாரைப் பாதுகாக்கத் தேவைப்படுகிறது?

இன்னும் சில அதிமேதாவிகள், 30 ஆண்டு யுத்தத்தில் நடக்காத யுத்தக்குற்றமா இப்போது நடந்து விட்டது என வியாக்கியானம் பேசுகிறார்கள். இவர்களது முட்டாள்தனத்தக்கு விளக்கமளிப்பது வீண்வேலை. அவர்களிடம் ஒரே கேள்வி, சித்திரவதைசெய்யப்பட்டது, கற்பழிக்கப்பட்டது, கொல்லப்பட்டது உங்கள் சகோதரன் என்றால்? உங்கள் தாயார் என்றால்? உங்கள் சகோதரி என்றால்? உங்கள் மனைவி என்றால்? உங்கள் பிள்ளைகள் என்றால்? இவ்வளவு ஏன் உங்கள் இனம் என்றால் - இதே போன்ற அலட்சியமான கேள்விகளை எழுப்பவீர்களா?



இன்னும் சிலர் புலிகளை (தீவிரவாதிகளைக்) கொன்றது ஒரு குற்றமா என்று கேட்கிறார்கள். இங்கே பிரச்சினை தீவிரவாதிகளைக் கொன்றதல்ல. சர்வதேசச் சட்டங்களுக்கும், மனிதஉரிமைச் சாசனங்களுக்கும் எதிராக நடந்து கொண்டது தான். சிவிலியன்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டது, வைத்தியசாலைகள் அறிந்தே தாக்கப்பட்டது, மனித உரிமைகளை மதிக்காது அரசாங்கம் செயற்பட்டது, சரணடைந்த போராளிகள் நீதிமுன் நிறுத்தப்படாது கற்பழிக்கப்பட்டது, கொல்லப்பட்டது ஆகிய குற்றச்சாட்டுக்களை சனல் 4 காணொளியும், ஐ.நா. நிபுணர்குழு அறிக்கையும் முன்வைக்கின்றன - இவை தான் பிரச்சினை. இந்த விடயம் தொடர்பில் பிரித்தானிய காடியன் பத்திரிகையின் ஆசிரியம் எழுதியிருந்த ஒரு விடயம் முக்கியம் பெறுகிறது - 

That the LTTE assassinated presidents and invented the suicide belt, that the Tigers used civilians as human shields, is no defence from the charge that Sri Lankan soldiers summarily executed prisoners in their custody. Sri Lanka is trying to pretend these events are history, as the economy and tourism pick up. They are not. This evidence has to be faced. - The Guardian Editorial. 

(காடியன் ஆசிரியம் முழுமையான வடிவத்தை இங்கு காண்க - http://www.guardian.co.uk/commentisfree/2011/jun/15/sri-lanka-evidence-that-wont-be-buried ) 


இவை இவ்வாறு இருக்க பலபேர் இன்று கேட்கும் கேள்வி “இனி இலங்கைக்கு என்ன நடக்கும்?” இது தொடர்பில் ஐ.நா. சபையின் செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் மார்ட்டின் நெசேர்க்கி இலங்கைவிவகாரம் தொடர்பிலான நடவடிக்கை பற்றி ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளிக்கையில் கூறிய விடயம் முக்கியமானது. “இலங்கை அரசாங்கள் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் அல்லது பாதுகாப்புச் சபை அல்லது மனித உரிமைகள் சபை அல்லது பொதுச்சபை ஆணையிடும் பட்டசத்தில் மட்டுமே பான் கீ மூனினால் நிபுணர் குழுவின் சிபாரிசின் படி சுதந்திரமான சர்வதேச விசாரணை ஒன்றினை முன்னெடுக்க முடியும்” என அவர் தெரிவித்திருந்தார்.

இது தான் நிதர்சனம். இலங்கை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தைத் தோற்றுவித்த ஒப்பந்தத்தில் இலங்கை கைச்சாத்திடவில்லை ஆகவே நேரடியாக இலங்கையை யுத்தக்குற்றம் தொடர்பில் விசாரிக்கும் அதிகாரம் ஹேக்கிற்குக் கிடையாது. (இது பற்றி என்னுடைய முந்திய பதிவில் குறிப்பிட்டிருந்தேன் - http://nkashokbharan.blogspot.com/2010/12/blog-post.html ) ஆகவே ஐ.நா.வின் பாதுகாப்புச்சபை அல்லது மனித உரிமைகள் சபை அல்லது பொதுச்சபை ஆணையிடும் பட்சத்தில் மட்டுமே இது சாத்தியமாகும். ஆனால் இங்கு தான் சிக்கலே. அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன ஆதரவளித்தாலும், இவ்வளவு ஏன் பெரும்பான்மை எண்ணிக்கையிலான நாடுகள் ஆதரவளித்தாலும் சீனா, ரஷ்யா என்ற 2 நாடுகளின் ஆதரவு இலங்கைக்கு இருப்பது இலங்கை அரசாங்கத்திற்குச் சாதகமானது. வீட்டோ அதிகாரம் உடைய இந்த 2 நாடுகளும் இலங்கைக்கு ஆதரவளிப்பதால் குறித்த சபைகளில் இலங்கைக்கெதிராக பெரும்பான்மை ஆதரவு இருந்தாலும் அவற்றை வீட்டோ செய்யும் அதிகாரம் இவற்றிடம் உண்டு. இதுதான் இலங்கையரசாங்கத்திற்கிருக்கும் ஒரேயொரு நம்பிக்கை. தற்போது மஹிந்த ராஜபக்ஷ ரஷ்யாவிற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருக்கிறார். அங்கு நடைபெறும் சர்வதேச பொருளாதார மாநாட்டில் பங்குபெறச் சென்றிருக்கும் அவர் அங்கு ரஷ்ய மற்றும் சீனத் தேசத் தலைவர்களைச் சந்திப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது, நிச்சயமாக யுத்தக் குற்றம் தொடர்பிலான ஆதரவு தேடலாகவே இந்தச் சந்திப்பு இருக்கும் என்பது வெள்ளிடைமலை. 

இஸ்ரேல் இலங்கைக்குக் ஆதரவு தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. உண்மையிலேயே அதை இலங்கைக்கான ஆதரவாக என்னால் பார்க்கமுடியவில்லை. பலஸ்தீன விடுதலையை உலகறிய ஆதரித்த, இஸ்ரேலை எதிர்த்த மஹிந்த ராஜபக்ஷவினுடைய அரசாங்கத்திற்கு அவர்கள் ஆதரவளித்தார்கள் என்பது தர்க்கரீதியாக ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. உண்மையிலேயே இலங்கை மீதான நிபுணர் குழு அறிக்கையை ஆதரிப்பது பின்னர் தனக்கே ஆபத்தாக முடியும் என்ற இஸ்ரேலின் பயம்தான் இஸ்ரேலின் இந்த நிலைப்பாட்டிற்குக்காரணம் என்பது எனது கணிப்பு.

அநியாயத்திற்கு தலைவர்கள் துணைபோகலாம், நாடுகள் துணைபோகலாம், ஏன் வீட்டோ அதிகாரம் கூட துணைபோகலாம் ஆனால் அவற்றால் நியாயத்தையும், நீதியையும், சத்தியத்தையும் மறைக்கவோ, அழிக்கவோ முடியாது. அவை நியாயத்தை, நீதியை, சத்தியத்தைத் தோற்கடிப்பது தற்காலிகமானதே நிரந்தரமல்ல. 

ஒருவேளை இலங்கையில் ஒரு அரசியல் மாற்றம் ஏற்பட்டால், புதிய அரசாங்கம் யுத்தக் குற்றம் தொடர்பான சுதந்திர சர்வதேச விசாரணைக்கு அனுமதியளித்தால் நிச்சயம் நீதி பிறக்கும். இந்த நிலை வரவேண்டுமென்றால் இலங்கைக்கு சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுப்பது அவசியம், அந்த அழுத்தம் தொடரவேண்டும். குற்றச்சாட்டுக்களுக்கு இலங்கை அரசாங்கம் முகங்கொடுத்தே ஆகவேண்டும், பதிலளிக்கும் கடப்பாடுடைய ஒரு ஜனநாயக அரசாங்கம் அதிலிருந்து மாறுபட்டு பின்வாசலால் தப்பிக்கும் முறையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது ஜனநாயக தேசம் - தன்னுடைய நாட்டு மக்களின் பாதுகாப்பையே சவாலுக்குட்படுத்தும் ஒரு தேசத்திற்கு சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுப்பதில் தவறேதுமில்லை. 

உங்கள் கை சுத்தமானது என்றால் அதை நிரூபிக்க நீங்கள் தயங்குவது ஏன்?


“தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும்”

Jun 12, 2010

இலங்கையில் இறக்குமதி வரிக்குறைப்பு - ஒரு பார்வை!

அண்மையில் இலங்கை அரசாங்கம் வாகனங்கள் மற்றும் இலத்திரனியற்பொருட்கள் மீதான இறுக்குமதி வரிகளை கணிசமான அளவு குறைத்துள்ளது. சராசரியாக 50வீதமளவிற்கு இறக்குமதி வரிக்குறைப்பு செய்யப்பட்டிருக்கிறது. பற்றாக்குறை வரவுசெலவையுடைய தேசத்தில் திடீரென அரசாங்கம் 50வீதளமளவிற்கு இறக்குமதி வரியைக் குறைப்பதன் நோக்கமென்ன? இறக்குமதிகள் அதிகரித்தால் பொருளாதாரத்திற்கு நன்மை பயக்காது, ஆக அதனைக் கட்டுப்படுத்தவும், வருமானம் பெறவுமே அரசாங்கம் இறக்குமாதிகளுக்கு வரிவிதிக்கிறது ஆனால் இலங்கையரசாங்கத்தின் இந்தத் திடீர்முடிவுக்குக் காரணமென்ன?

30 வருட யுத்தம் முடிந்து இப்பொழுதுதான் சுமுகமான சூழல் நிலவுவாதாகக் கூறும் அரசாங்கம், இச்சூழலைப் பயன்படுத்தி உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதிகளை ஊக்குவிப்பதைவிடுத்து இறக்குமதியை ஊக்குவிக்கும் செயற்பாட்டில் ஈடுபடுவதேன்? இதில் ஏதும் உட்-காரணங்கள் ஒளிந்திருக்குமா? போன்ற சந்தேகங்கள் எழவே செய்கிறது.

சாதாரணமாக கொழும்பில் வசிக்கும், நல்ல வேலையில் இருக்கும், இளைஞர்கள் இந்த வரிக்குறைப்பை ஆவலுடன் வரவேற்கிறார்கள். ஏனெனில் இதுவரை விலைகூடவாக இருந்த வாகனங்களைக்கூட இனி கணிசமானளவு குறைந்தவிலைக்கு வாங்கலாம். உதாரணமாக வரிக்கு முன்னைய பெறுமதி 500000 உடைய 1000cc க்கு குறைந்த இயந்திரவலுவுடைய பெற்றோல் காரொன்று முன்பு வரியின் பின் 1435000 ஆகக் காணப்பட்டது, இப்போது வரிக்குறைப்பின் பின் அதன் விலை 950000 ஆகக்குறைந்துள்ளது. வாகனங்கள் போலவே இலத்திரனியற்பொருட்களின் மீதான இறக்குமதி வரியும் கணிசமானளவு குறைக்கப்பட்டுள்ளது. அதுவும் குறிப்பாக வளிச்சீராக்கி இயந்திரங்கள் (Air Conditioning Machines) மீதான இறக்குமதி வரி 94வீதம் குறைக்கப்பட்டுள்ளது. இனி கொழுத்தும் வெயில்காலத்தில் அநேகமான நடுத்தர வீடுகளும் குளிரூட்டப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கலாம். இப்படியான விலைக்குறைப்பு நல்லதுதானே என சாதாரண பொதுமகன் சொல்வது கேட்கிறது. என்ன செய்ய இந்தச் சாதாரண பொதுமகன்கள் தானே இந்த அரசாங்கத்தை அரியணையில் இருத்தியவர்கள்! அவர்களுக்குச் சந்தோஷம் ஆனால் அந்த சந்தோஷ மிகுதியில் ரணில் விக்கிரமசிங்ஹ அவர்கள் கூறிய கருத்து ஒன்றும் கூட காற்றோடு காற்றாய் அலட்சியம் செய்யப்பட்டுப் போய்விட்டது. இந்த வரிக்குறைப்பு செய்யப்பட்ட மறுதினம் ரணில் விக்கிரமசிங்ஹ ஒரு கேள்வியெழுப்பியிருந்தார். “பென்ஸ் காரின் விலையைக் குறைத்த அரசால், ரின் மீன் விலையைக்குறைக்க முடியாதா?” என்று அவர் கேட்டிருந்தார். வழமையாகவே ரணிலின் பேச்சை யாரும் பொருட்படுத்தவில்லை ஆனாலும் அதில் அர்த்தம் இல்லாமல் இல்லை. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், சிறுபிள்ளைகளுக்குக் கொடுக்கும் பால்மாவிலிருந்து, தினம் உண்ணும் அரிசி முதல் முக்கிய உணவுப்பொருள் இறக்குமதிக்கெல்லாம் வரி விதிக்கப்பட்டிருக்கிறது. இன்றைய அரிசி, சீனி, பருப்பு விலைகளெல்லாம் உச்சஸ்தாயியில் ஏறிக்கொண்டிருக்கிறது ஆனால் இதைக்குறைக்க வேண்டும் என்று எண்ணாத அரசு வாகனங்கள், இலத்திரனியல் பொருட்கள் என்பவற்றின் மீதான வரியினைக் குறைத்ததன் சூட்சுமம் என்ன?கார் மற்றும் ஏனைய சொகுசு வாகனங்களின் மீதான இறக்குமதிவரிகளைக் குறைத்த அரசாங்கம், நடுத்தரப் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் மோட்டார் சைக்கிள்கள் மீதான இற்குமதி வரியைக் குறைக்காதது ஏன்? இதை யோசிக்கத் தெரிந்தவர்கள் இத்தேசத்தில் பெரும்பான்மையளவில் இருந்திருந்தால் இந்த அரசாங்கமே அரியணையேறியிருக்காது. 

இரண்டாவதாக வாகன இறக்குமதியை ஊக்குவிக்கும் முகமாக வரிகளைக் குறைத்த அரசாங்கம் வாகனம் பயணிப்பதற்கான வசதிகள் செய்து கொடுக்கும் திட்டங்களை தொடங்கியிருக்கிறதா? இந்த வரிக்குறைப்பினால் நாட்டுக்குள் வரும் இலட்சோப இலட்சம் வாகனங்களும் இதே வீதிகளிலேயே பயணித்தால் போக்குவரத்து நெரிசல் இன்னும் பலமடங்காகும், அப்படி உருவாகும் நெரிசலை இரும்பு மேம்பாலங்களை 3மாத காலத்துக்குள் போட்டுக்கூடக் கட்டுப்படுத்த முடியாது. இன்று காலைவேளைகிலும், மாலை அலுவலகம் முடியும் நேரங்களிலும் கொழும்பு வீதிகளில் பயணிப்பது என்பது சவலான காரியம், இன்னும் வாகனங்கள் இதே வீதியில் இறக்கப்பட்டால் போக்குவரத்தின் நிலையென்ன? இதற்கான மாற்றுத்திட்டங்களை அரசாங்கம் வகுத்திருக்கிறதா? அப்படி வகுத்தாலும் பாதைகள் பெருப்பிக்கப்பட்ட பின் தான் இந்த வரிக்குறைப்பு நிகழ்த்தப்பட்டிருக்க வேண்டும், அது நீண்டகாலத்திட்டமாக அமுல்ப்படுத்தப்பட்டிருக்கவேண்டும் மாறாக இரவோடு இரவாக வரியைக்குறைப்பது என்பது பொருந்தாத செயல்.

அடுத்ததாக இந்த விலைகுறைந்த காலத்தில் வாகனங்களை வாங்குபவர்கள் யோசிக்க வேண்டிய சில விடயங்கள் இருக்கிறது. முதலாவதாக எரிபொருள் விலை. இன்று வாகன வரிகளைக் குறைத்த அரசாங்கம் சில மாதம் கழித்து கணிணசமான வாகனங்கள் இறக்குமதிசெய்யப்பட்ட பின் எரிபொருள் விலைகளை அதிகரித்தால் என்ன செய்வது என்பதைத் திட்டமிட வேண்டும். அண்மை வருடங்களில் ஒரு லீற்றர் பெற்றோல் 180ரூபாய்கள் வரை கூடியிருந்ததைக் கருத்திற்கொள்ளவேண்டும். ஆக விலை இன்று குறைவு என்பதற்காக வாகனங்களை அவசரப்பட்டு ஆராயாமால் வாங்கிவிட முடியாது. அடுத்ததாக இரண்டாம் சந்தைவிலை. அண்மை வாரங்களில் இரண்டாஞ்சந்தை விலைகள் இந்த வரிக்குறைப்புக் காரணமாக ஓரளவு தளம்பலடையத் தொடங்கியுள்ளன. ஆக இரண்டாஞ்சந்தையில் வாகனம் வாங்க எண்ணியிருப்பவர்கள் இன்னும் சிலவாரங்கள் பொருத்திருக்கலாம். ஆனால் இன்று புதிதாக வாகனங்களை குறைந்த விலையில் இறக்குமதி செய்பவர்கள், எதிர்காலத்தில் எரிபொருள் விலைகள் கூடினால் வாகனங்களின் இரண்டாஞ்சந்தைவிலைகள் குறையும் என்பதையும் யோசிக்கவேண்டும். மேலும் அதிக விலையுள்ள சொகுசு ரக வாகனங்களை வாங்க எண்ணியுள்ளவர்கள், இறக்குமதி வரிமட்டுமே குறைக்கப்பட்டுள்ளது, வருடாவருடம் கட்ட வேண்டிய சொகுசு வாகனங்களுக்கான சொகுசுவரிகள் குறைக்கப்படவில்லை என்பதைக் கருத்தற்கொள்க.

நல்ல குளிர் காலத்தில் குளிர்களி விற்பதைப்போல அரசாங்கமும் வேண்டாத நேரத்தில், வேண்டப்படாத சலுகையை அறிவித்துள்ளது. நாளை இதன் மூலம் அரசாங்கம் இழக்கும் வருவாயை உணவுப்பொருட்கள், உடைகள் மற்றும் ஏனைய அத்தியாவசியத் தேவைகள் மீது இன்னும் அதிக வரி விதிப்பதன் மூலம் மீட்டுக்கொண்டாலும் வியப்பதற்கில்லை.

குறைக்கப்பட்ட இறக்குமதி வரி விபரங்கள் :

Aug 18, 2009

தோரணங்களில் ஒரு முரண்பாடு...


இதைப் பற்றி நீண்டகாலகமாகவே எழுத யோசித்துக்கொண்டிருந்தேன் இன்று தான் சரியான சந்தர்ப்பம் வாய்த்தது. இன்று பம்பலப்பிட்டி மாணிக்கப்பிள்ளையார் கோவிலுக்குப் போயிருந்தேன் - திருவிழாக்காலம் ஆதலால் கோயிலே சோடிக்கப்பட்டு தோரணங்களும் மின்னொளி அலங்காரமும் நிறைந்து மங்கலகரமாக இருந்தது. என்னுடைய கண்கள் அந்த அலங்காரமான தோரணங்களைப் படம் பிடிக்கையிலே என்றைக்கோ பாடசாலையில் சமய பாடத்தில் படித்த ஒன்று மனதில் தோன்றி ஒரு முரண்பாட்டை ஏற்படுத்தியது.

தென்னங்குருத்திலைத் தோரணமானது மங்கல மற்றும் அமங்கல நிகழ்வுகள் இரண்டிலும் வெவ்வேறு விதமாகக் கட்டப்படும். அதாவது மங்கல விழாக்களில் தோரணங்களில் காணப்படும் கூர்கள் கீழ் நோக்கியும் அமங்கல நிகழ்வுகளில் அந்தக் கூர்கள் மேல் நோக்கியும் தான் கட்டப்பட வேண்டும் - இதற்கு எங்கள் சமயப் பாடப்புத்தகத்தில் தரப்பட்ட விளக்கமானது மங்கல விழாக்களுக்கு தேவர்கள் மேலுலகத்தினின்று இப்பாருக்கு வருவதனைச் சுட்டும் விதமாக கூர் கீழ் நோக்கியும் அமங்கல நிகழ்வான மரண நிகழ்வுகளில் ஆத்மா மேலுலகத்திற்குச் செல்லுவதைக் குறிக்கும் விதமாக கூர் மேல்நோக்கி அமையுமாறு தோரணம் அமைக்கப்படும் எனவும் கூறப்பட்டது. இதை நான் தெளிவாகப்படித்திருந்தேன் அந்த ஞாபகம் இந்த மங்கலகரமான திருவிழாவில் தோரணம் அமங்கல முறையில் கட்டப்பட்டதைக் கண்டதும் மனதில் தோன்றியது. சரி நான் ஏதோ குழம்பிவிட்டேனோ என தற்போது இன்னும் பாடசாலையில் படித்துக்கொண்டிருக்கும் எனது தம்பி, தங்கையிருவரிடமும் விசாரித்ததில் நான் நினைத்தது சரியே - பாடப்புத்தகத்திலும் அப்படித்தான் இருக்கிறது - அதுவும் 10, 11 ஆம் வகுப்புப் புத்தகங்களிலல்ல ஆண்டு 5 புத்தகத்தில் இது பற்றித் தெளிவாக இருக்கிறது.

இந்தக் கோயிலில் மட்டுமல்ல இன்று பல மங்கல விழாக்களில் நான் இந்த அமங்கல முறைத் தோரணத்தையே காண்கிறேன் - பார்க்கும் போதெல்லாம் இந்தச் சந்தேகம் என்னை பற்றிக்கொள்ளும். இப்படித்தான் பலவிடயங்கள் இந்து சமயத்தில் தடம்மாறி நடந்துகொண்டிருக்கிறது - நிறைய மரபுகள் உடைக்கப்பட்டுவிட்டன - இது மிகவும் கவலைக்கும் வருத்தத்திற்கும் உரியது. இது பற்றி இப்பதிவை எழுத முன் நண்பன் ஒருவனிடம் பேசினேன், அவன் சொன்ன பதிலும் என்னை மிகவும் வருத்தியது. “மச்சாங், இந்தக் காலத்தில தோரணம் கட்டுறதே பெரிய விசயம் இதுல மங்கலம், அமங்கலம் எண்டுகொண்டு.... மற்றது தோரணத்தை முற்திமாதிரி ஐயர்மாரோ விசயம் தெரிஞ்சஆக்களோ முன்னுக்கு நிண்டு கட்டுவிக்கிறாங்களா??? இல்லை... மாலை கட்டுறவன் ஓடர எடுத்திட்டு தனக்கு தெரிஞ்ச முறையில கட்டுறான்... இதப்பற்றி ஐயர்மாரும் பெரியவங்களுமே கவனிக்கேல... நீ ஏன்டா சும்மா...” - அவன் சொன்னது இந்தக்காலத்தின் பிம்பம் - தவறுகளை நாங்கள் திருத்த முனையாமல் தட்டிக்கழிக்கின்றோம் அல்லது அலட்சியம் செய்கின்றோம் நாளைக்கு அந்தத் தவறுகளே சரி என்ற நிலமைக்கு வந்துவிடும், நாங்களும் “பெரிய மனசுக்காரராக” அதையும் ஏற்றுக்கொள்கின்றோம்.....

கொஞ்சம் யோசியுங்கள் இந்தச் சின்னச் சின்ன அலட்சியங்களேல்லாம் எங்கள் இந்து சமய நெறிமுறைகளையெல்லாம் தகர்த்து எறிந்துவிடாதா???

Jul 17, 2009

இலங்கையில் வளி மாசுக் கட்டுப்பாடு.

அண்மைக்காலமாக இலங்கையில் போக்குவரத்துச் சாதனங்களினால் (அட... வாகனங்கள் தான்) வெளியிடப்படும் காபன் கழிவகளால் வளி மாசு ஏற்படுவதைக் குறைக்க (தடுக்க முடியாதே!) வாகனங்கள் வருடாவருடம் பெற வேண்டிய வாகன வரி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு புகை வெளியேற்றத் தராதரச் சான்றிதழ் பெற வேண்டும். அதாவது குறித்த வாகனமானது குறிப்பிட்ட அளவிலான காபனையே வெளியேற்றுகிறது எனச் சான்றிதழ் பெற வேண்டும், பரிசோதளையின் போது வாகனம் குறிக்கப்பட்ட எல்லையளவுக்கு அதிகமாக வளியை மாசுபடுத்துவது கண்டறியப்பட்டால் குறித்த வாகனம் பழுதுபார்க்கப்பட்டு வாகனக் கழிவு வெளியேற்றல் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் (சுருக்கமாக பச்சைச் சான்றிதழ்) பெறும் வரை வாகன வரி அனுமதிப்பத்திரம் புதுப்பிக்கப்பட முடியாது - அப்பத்திரம் இல்லாமல் வாகனங்களைப் பயன்படுத்துவது சட்டத்திற்கு முரணாண
து.

இந்த பச்சைச் சான்றிதழை வழங்குவதும் அது தொடர்பான பரிசோதனைகளைச் செய்வதும் யாரெனத் தெரியுமா? அரசாங்கமோ, போக்குவரத்துத் திணைக்களமோ அல்ல மாறாக லாஃப்ஸ் பிடிமானங்கள் தனியார் குழுமத்தின் ஒரு அங்கமாக உருவாக்கப்பட்டிருக்கும் லாஃப்ஸ் எகோ ஸ்ரீ தனியார் நிறுவனமாகும். இலங்கையின் பல பகுதிகளிலும் பரிசோதனைக் கூடங்களை அமைத்திருக்கிறார்களாம், ஆனால் நான் ஒரு பரிசோதனைத் தளம் எங்கே இருக்கிறது எனக் கண்டறிய மிகவும் கஷ்டப்பட்டு விட்டேன். பரிசோதனைகளும் சான்றிதழும் இலவசமல்ல. மோட்டார் சைக்கிளுக்கு ரூ.284.50 முதல் கார்களுக்கு ரூ.759ம், பேரூந்துகளுக்கு ரூ.696ம், லொறிகளுக்கு ரூ.1138.50ம் அறவிடுகிறார்கள். பரிசோதிக்கப்பட்டுப் பழுதுபார்க்கப்பட வேண்டியிருந்தால் குறிப்பிட்ட பழுதுபார்ப்பு வேலைகள் முடிந்த பின்பு முதலாவது மீள் பரிசோதனை இலவசமாச் செய்து தரப்படும். இது தொடர்பில் மேலுமறிய இங்கே சொடுக்கவும்.

சரி, நான் இப்பதிவை எழுதுவதற்குக் காரணம் இந்தத் தகவல்களைத் தொகுப்பது அல்ல. சாதாரணமாகப் பாதையில் போகும் போது சில பேரூந்துகளையும், சில வாகனங்களையுந்தவிர 90மூ வாகனங்கள் பெருமளவு கரும்புகையை வெளியேற்றுவதில்லை நாம் அனைவருமே கண்டு கொண்டிருப்போம். இப்போது இவற்றுக்கெல்லாம் பரிசோதனையும் பச்சைச் சான்றிதழும் அவசியமாக்கப்பட்டிருப்பது நல்லது (கொஞ்சம் அலைச்சல் தான்). சூழல் பாதுகாப்புத் தொடர்பில் மனிதன் விழிப்படைய வேண்டிய அவசரக் காலகட்டம் வந்து விட்டது. இந்த வாகனங்களுக்கெல்லாம் புகைப் பரிசோதனையும், கட்டுப்பாடும் விதித்த அரசாங்கம் அதிகமாக புகையை வெளியேற்றும் ஒரு போக்குவரத்துச் சாதனத்தை மறந்து விட்டது.

இன்று முச்சக்கரவண்டியில் வெள்ளவத்தைக் கடற்கரையோரம் பயணிக்கும் போது புகையிரதமொன்று கரும் புகையைக் கக்கியபடி சென்றது. படத்தில் நீங்கள் காணும் புகைமூட்டம் அந்தப் புகையிரதம் வெளியேற்றிய புகைக்கழிவே. கொஞ்சம் முதல் பட்மெடுத்திருந்தால் இன்னும் அழகாகத் தெரிந்திருக்கும், ஆனால் அது கக்கிய புகையில் கொஞ்சம் மூச்சடைத்துத் தடுமாறிவிட்டேன். “புதுமைகள்” செய்யும் அரசாங்கம் (அட... வேற மாதிரியென்றும் நினைக்க வேண்டாம்) இதையும் கவனிக்கவும். கட்டுப்பாடு விதித்த எல்லா வாகனங்களையும் விட அதிக புகையை புகையிரதங்கள் வெளியேற்றுகிறது. இது புகையிரதப் பயணிகளுக்கு மட்டுமன்றி புகையிரதம் பயணிக்கும் பாதையருகே இருப்பவர்களையும் பெருமளவு பாதிக்கிறது.

Jul 7, 2009

I strongly condemn Daily Mirror on "Royal Chickens Out"

I really want to condemn Daily Mirror for their article titled "Royal Chickens Out", published on Monday 6th July 2009. (Read the article here).

The article says that the Royalists have withdrawn from the Rugby Knockout tournament despite the fact that they became the champions in the league tournament. It also says that Royal has a history of pulling out of tournaments.

Before anything the Daily Mirror and all other readers should note that Royal College does not only concentrate on Sports but also on academic sector too. Royal College has produced very good results in sports as well as in academic side too. As it is noted Royal produces Island wide Top Rankers every year in G.C.E. A/L examinations.

This year the league started a bit late after the case filing saga and it ended on 04th of July 2009. As you may know the Sri Lankan G.C.E. Advanced Level examinations are conducted by the Department of Examinations in the month of August and it is notable that nearly half of the Royal College 1st XV Rugby team is sitting for the G.C.E. A/L examinations this year - to be clear Naren Dhason the captain of the side, Nikira Senanayake - the deputy skipper and most of the pack and some from the line are sitting for the examination this year, thus to concentrate on their studies they need to take at least one month of full studying sessions, Thus they could have decided to pull out from the tournament.

On the other hand I also want to condemn the Sri Lanka Schools Rugby Football Union for having the school based Rugby tournaments in the months of June & July where most of the School Rugby team members sit for their G.C.E. A/L examinations in August.

Please kindly note that unlike any other educational institutions in Sri Lanka - Royal is always balanced with academic and co-curricular activities and do not see a school team with a perspective you see a club team.