Jun 28, 2009

ஈழத்து இலக்கியங்களின் களஞ்சியம்

noolaham.orgமதுரைத்திட்டம் பற்றிய எனது பதிவில் கஜன் அண்ணா அளித்த பின்னூட்டத்தில் நூலகம் தளம் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். கொஞ்சம் உலாவிப் பார்த்தேன். அருமையான தளம் அது. நூலகமானது ஈழத்து இலக்கியங்களை கணணிமணப்படுத்தி ஆவணப்படுத்தும் தன்னார்வ முயற்சி. இதுவரை 3400 ஆவணங்களை கணணிமயப்படுத்தி இருக்கிறார்கள். வெறும் ஈழ்த்து நூல்கள் மட்டுமன்றி இதழ்கள், பத்திரிகைகள், பிரசுரங்களை என ஈழத்து எழுத்தாவணங்களை மின்வடிவாக்கி ஆவணப்படுத்துகின்றனர்.


யாழ்ப்பாண வைபவ மாலை போன்ற பழந்தமிழ் இலக்கியங்கள் முதல் அண்மைய காலப் படைப்புக்கள் வரை பட்டியல் நீழ்கிறது. மதுரைத்திட்டத்தை விட அதிக நூல்களை ஆவணப்படுத்தி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து நூல்களையும் PDF கோப்பாக இலவசமாகத் தரவிறக்கிக்கொள்ள முடியும். இப்போது ஈழத்து நூல்களையும் சுவைக்கும் வாய்ப்பும் எம்மவருக்குக் கிட்டியிருக்கிறது. எங்களுடைய பழைய இதழ்களை குறிப்பாக எங்கள் தாய் தந்தையர் வாசித்து மகிழ்ந்த சிரித்திரன் போன்ற இதழ்களை பார்க்கும் வாய்ப்பையும் இது எனக்கு ஏற்படுத்தித் தந்ததில் மெத்த மகிழ்ச்சி. இன்று உப்புச் சப்பில்லாத சினிமாவை மையப்படுத்திய வணிக நோக்கமுடைய தென்னிந்திய இதழ்களுடன் ஒப்பிடுகையில் எம்மவரது படைப்புக்கள் மிக்கத் தரமானவையாக இருந்திருக்கின்றன. இன்னும் ஆயிரம் இதழ்கள் நூலகத்திலுண்டு - நான் வாசிக்கத் தொடங்கிவிட்டேன்.



நீங்களும் வாசிக்க விரும்பினால், சொடுக்குங்கள் http://www.noolaham.org/