Jun 24, 2009

மாற்றம்?

we can change (???) !“எங்களால் மாற்ற முடியும்” எனச்சொல்லிக்கொண்டொருவர் பதவிக்கு வந்த கதை உலகறிந்ததே. அவரது பேச்சும், துணிச்சலும் உலக மக்களையே திரும்பிப் பார்க்க வைத்தது. உலக வல்லரசின் தலைவராக ஒரு ஈரநெஞ்சமுடையவர் வரவிருக்கிறார் எல்லாக் கொடுமைகளும் மாறப்போகிறது என அந்த வல்லரசின் பிடியில் சிக்கித் தவிக்கும் நாடுகளெல்லாம் கனாக்கண்டன....


அவர் வந்தார் - மாற்றம் வந்ததா? கேள்வி மட்டுந்தான் உண்டு எம்மிடம் பதிலில் உறுதியில்லை. வேண்டுமானால் நகைச்சுவைப்பாணியில் “மாற்றம் வந்நது... ஆனால் வரவில்லை” அப்படியென்று அழுது கொண்டிருக்க வேண்டியது தான். இன்னும் ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான் பகுதிகளில் யுத்தம் சூடுபிடித்துக்கொண்டுதான் இருக்கிறது. தீவிரவாதத்தை நீங்கள் அழியுங்கள், ஒழியுங்கள் அது பற்றிக் குறையில்லை ஆனால் அந்தப் போராட்டத்தில் அப்பாவி மக்கள் பலிகடாக்களாக்கப்படுவது ஏன்?


அண்மையில் ஆனந்த விகடன் கூறிய புள்ளி விபரப்படி அண்ணளவாக ஒரு தீவிரவாதியைக் கொல்வதற்கு 50 அப்பாவி மக்களும் இறக்கவேண்டியதாவுள்ளது எனப்படுகிறது. என்ன கொடுமை இது? சில வளர்ந்த நாடுகளிலும் தான் தீவிரவாதம், மாஃபியா என் எல்லாம் உண்டு, அங்கேயும் மக்களைக் கொன்று தானா அவர்களை அழிக்கிறீர்கள்? - அதென்ன அவர்களுக்கொரு நியாயாம் - 3ம் உலக நாட்டு மக்களுக்கொரு நியாயாம்? உங்கள் சுய தேவைகளுக்காக இந்த அப்பாவி மக்கள் பலிகடாக்களாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.


மாற்றம் - வெறும் சொல்லிலல்ல உண்மையில் நடக்க வேண்டுமாயின் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான உண்மையான எண்ணம் இருக்கவேண்டும். அது அந்தத் தலைவரிடமிருந்தது. ஆனால் பாருங்கோ அந்தப் பதவி இருக்கை இருக்கிறதே அது தான் எப்பேர்ப்பட்டவரையும் மாற்றிவிடும். இன்னும் காலமிருக்கிறது மனிதனரப் பதவி மாற்றுகிறதா.... இல்லை மனிதர் பதவியின் தன்மையை மாற்றுகிறாரா என உறுதிப்டுத்திக்கொள்ள..